வியாழன், 7 பிப்ரவரி, 2013

பயம் எதனால் ஏற்படுகிறது?(பகுதி-2)


பயம் எதனால் ஏற்படுகிறது?(பகுதி-2)

பயம் மனம் சம்பந்தப்பட்டது.

பயம் இரண்டை மட்டும் நாம்
சார்ந்திருப்பதால்தான் உண்டாகிறது.

ஒன்று இந்த உடலை
மற்றொன்று நம் உடமைகளை.

ஏனெனில் இந்த உடலின்மூலம்தான்
மனம் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுகிறது.

அந்த உடலுக்கு ஏதாவது ஆகிவிட்டால்
அதனால் ஒன்றும் செய்ய இயலாது போகும்.

அதனால்தான் அது எப்போதும் உடலை பற்றியே கவலைப்பட்டுகொண்டிருக்கிறது.
அதை வளர்க்க, அதை பாதுகாக்க என
வாழ்நாள்முழுவதும் அது ஓயாமல் நேரத்தையும் ,உழைப்பையும், பணத்தையும்,செலவிட்டுக்கொண்டிருக்கிறது.

அதற்க்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற
அச்சத்தில்தான் அது கணக்கற்ற
பாதுகாப்புக்களை நாடுகிறது.

மனிதர்களின் அமைப்புகளும்
இதே வகையில்தான் தன் பாதுகாப்புக்கு பிறர் அச்சுறுத்தலாக விளங்குவார்களோ என்று எண்ணி அஞ்சி ஒருவர் மீது தொடர்ந்து விரோதமும் வெறுப்பும் பாராட்டி அமைதி இழந்து தவிக்கின்றன.

அப்போதும்  அனைத்தும் தன் கண் முன்
தவிடுபொடியாவதை.பலமுறை அது கண்ணுற்று
அந்த நினைவுகள் நீங்க இயலா பதிவாக
மனதில் பதிந்துவிடுகின்றன.

எனவேதான் மரணம் அனைத்திற்கும்
முற்றுபுள்ளி வைத்துவிடும் என்றுதான்
அது பயப்படுகிறது. .

இரண்டாவது மனம் இன்பத்தை பொருள்கள்,
உடைமைகள், உறவுகள் என
பல புறப்பொருள்கள் மூலம் தேடுகிறது.

அவைகளை இழந்துவிடுவோமோ ,
அதனால் வரும்  இன்பத்திற்கு பாதிப்பு   வந்துவிடுமோ
என்று தொடர்ந்து பயம் மனதை வாட்டிகொண்டிருக்கிறது.

கடவுள் நம்பிக்கை உள்ளவன்
இறைவனிடம் அதற்க்கு பாதிப்பு இல்லாமல்
இருக்க வேண்டிக்கொள்கிறான்.

இல்லாதவன் தன்  அறிவின்
துணையை நாடுகிறான்.

இரண்டும் இல்லாதவர்கள்.
எதைபற்றியும் கவலைப்படுவதில்லை.

எனவே அனைத்து துன்பங்களுக்கும்
காரணம் உடல் மீது வைத்திருக்கும் பற்றும்
உடமைகள் மீது வைத்திருக்கும் பற்றும்தான்
காரணம் என தெள்ள தெளிவாக தெரிகிறது.

ஆனால் எந்த பற்றையும்  விடமுடியவில்லையே?
எப்படி பயத்திலிருந்து விடுபடுவது?

கையில் எண்ணை பிசுக்கை நீக்க
சோப்பை பயன்படுத்துகிறோம்.
கையில் ஒட்டியுள்ள பெயிண்டை போக்க
கெரொசினை பயன்படுத்துகிறோம்.

 கெரோசின் துர்நாற்றத்தை போக்க
சோப்பை பயன்படுத்துகிறோம்.

சோப்பு நாற்றத்தைபோக்க தயிர் அல்லது
மோரை உபயோகிக்கிறோம்.

இப்படியாக ஒவ்வொரு பற்றை நீக்க
ஏதாவது ஒரு புதிய பற்றை பிடித்துக் கொள்ளுகிறோம்.

இது நீண்டு கொண்டே போகிறது.
இதற்க்கெல்லாம் எப்படி தீர்வு காண்பது?

(இன்னும் வரும்)

1 கருத்து: