வியாழன், 21 பிப்ரவரி, 2013

விழித்துகொள்ளுங்கள்


விழித்துகொள்ளுங்கள்
 
அகந்தையை அழிக்காமல் 
ஆன்ம ஞானம் கிடைக்காது 

அகந்தை இருக்கும்வரை 
மனம் பிறரை அடிமைப்படுத்த நினைக்கும் 

அகந்தை இருக்கும்வரை
மனம் பிறர் மீது ஆதிக்கம்
செலுத்த நினைக்கும் 

அகந்தை இருக்கும்வரை 
மனதில் ஆசைகள் 
வளர்ந்துகொண்டே போகும்

ஆசைகள் இருக்கும் வரை 
அதை நிறைவேற்ற ஓய்வில்லாமல்
உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும்

ஒரு ஆசை நிறைவேற்றப்பட்டதும் 
அடுத்த ஆசையை நோக்கி மனம் ஓடும். 

ஆசைகளை நோக்கிய பயணத்தில் 
வாழ்நாள் கழிந்து போகும்

ஆசைக்கு குறுக்கே வருபவர் மீது 
வெறுப்பும் சினமும் உண்டாகும். 

வெறுப்பும் சினமும் நம்மை 
அழிவு பாதைக்கு செலுத்தி
நம் வாழ்க்கையை 
அமைதியற்றதாக செய்து விடும். 

தீய ஆசைகள் மனிதனை 
பாவக்குழியில் தள்ளிவிடும்

சுற்றங்களை அழித்துவிடும். 
நோயில் தள்ளிவிடும். 

அளவுக்குமேல் 
பொருள் சேர்ந்தால் 
அதை பாதுகாப்பதிலேயே 
வாழ்நாள் போய்விடும். 
அதை அனுபவிக்கவும் முடியாது 

தீய வழியில் சேர்த்த செல்வம் 
இருக்கின்ற செல்வதையும் 
சேர்த்து தீயை போல் அழித்துவிடும். 

அற வழியில் சேர்த்த 
செல்வம்தான் இன்பம் தரும் 

சேர்த்த செல்வத்தில்
தனக்கு பயன்பட்டது போக  
இல்லாதவர்க்கு இயன்ற அளவு 
தருமம் செய்ய வேண்டும்.

தர்மம் செய்வது என்பது 
இயல்பான குணமாக அமைய வேண்டும். 

பலனை எதிர்பார்த்து செய்வது 
ஏமாற்றத்தை தான் அளிக்கும். 

உதவி  செய்தால் 
நன்றியை எதிர்பார்க்கக்கூடாது. 

செய்த உதவியை
 உடனே மறந்துவிடவேண்டும் 

இல்லையேல் உதவி பெற்றவர்கள் 
நமக்கு எதிரிகளாகிவிடுவர்

செல்வம் நிலையாது. 
அது இடம் மாறிக்கொண்டே இருக்கும். 
அதை பிடித்து வைக்க முடியாது. 
அது ஒரு அளவுக்கு மேல் பயன்தராது. 

அதை பூட்டி வைப்பது 
கொள்ளையர்களுக்கு அளிக்கவே. 

பிறருக்கு பயன்பாடா செல்வம் 
எப்படியாவது கொள்ளை போய்விடும். 

எப்படி என்று 
எல்லோருக்கும் தெரிந்ததுதான்

வங்கியில் இன்டர்நெட் கணக்கு 
வைத்திருப்போர் இன்று மிக சுலபமாக
பல லட்சங்களை சில நிமிடங்களில் 
ஏமாந்து போகிறார்கள்

வங்கிகணக்கிலிருந்து எடுத்த பணம் 
வங்கியை விட்டு வெளியே வருவதற்குள்  கொள்ளையடித்து விடுகிரார்கள்.

பலபேருக்கு எடுத்த பணம்
பயன்படுவதில்லை.

பல ஆயிரக்கணக்கான மக்களை
ஒரு சிலர் மிக சுலபமாக ஆசைகாட்டி பல கோடி ரூபாய்களை ஏமாற்றி எடுத்துக்கொண்டு 
தலைமறைவாகி விடுகிறார்கள். 

பிறகு வாழ்நாள் முழுவதும் 
கொள்ளை போன செல்வதை நினைத்தே
மக்கள் இன்று மாண்டு போகிறார்கள். 

எனவே சம்பாதிப்பதில் 
கண்டிப்பாக தர்மம் செய்யுங்கள். 
அது உங்களை மட்டும் காக்காது 
உங்கள் சந்ததியையும் காக்கும்

பிறரை ஏமாற்றுபவன் 
தானும் ஏமாந்துபோவான். 
அவன் செய்த தீவினை அவனை 
பல பிறவிகள் தொடரும். 

பணிவாக இருங்கள்.
உங்களை பிணிகள் அணுகாது. 

சினம் கொள்வதால்தான். 
மனம் கெடுகிறது.
உடல் நலம் கெடுகிறது. 

இன்று தடுக்கி விழுந்த 
இடமெல்லாம் மருத்துவமனைகள்.

மனிதர்கள் பணம் தேடுவதில் 
நோய்வாய் படுகிறார்கள். 
சேர்த்த பணம் முழுவதும்
மருந்துகளுக்காகவும்,
மருத்துவ பரிசோதனைகளுக்காகவும்,
மருத்துவ சிலவுக்காகவும் அழிந்து போகிறது. 

அன்பு இல்லாமையே
அனைத்திற்கும் காரணம் 

பெற்றோரிடம் அன்பு இல்லை
உற்றோரிடமும் அன்பு இல்லை 
தன்னை சுற்றியுள்ளோரிடமும் அன்பில்லை

அன்பே சிவம் 
அன்பில்லாத வழிபாடுகள் 
வெறும் கூப்பாடுகள்.
அது யார் காதிலும் விழாது 
அதனால் எந்த பயனும் இல்லை.

சொல்லில் செயலில் 
நேர்மை இல்லை. 
நேர்மை இல்லையேல் 
வாழ்வதில் எந்த பயனில்லை. 

விலங்குகளுக்கும்
மனிதர்களுக்கும் எந்த பேதமும் இல்லை.
உருவத்தில் தவிர. 

7 கருத்துகள்:

  1. எத்தனை எத்தனை உண்மை கருத்துக்கள் ஐயா...!

    வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்களை
      பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி

      நீக்கு
  2. வைகோ பதிவில் பார்த்துவிட்டு வந்தேன். தங்கள் கருத்துகள் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. வருகைக்கும்
      கருத்துக்களை
      பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி

      நீக்கு