வியாழன், 8 ஜனவரி, 2015

சிந்தனை சிதறல்கள் 500(2)

சிந்தனை சிதறல்கள்  500(2)


நல்லதோர் சிந்தனைகளை நாடும்
மனம் கொண்டவர்களால்தான்
நாடும் வீடும் நலம் பெரும் 

 
அதற்க்கு நாம் அனைவரும் 

முயற்சி செய்வோம் 



அதன் வெளிப்பாடே சிந்தனை சிதறல்கள் 

என்னும் சிறு ஆலமரம் .


அது 500 விழுதுகளை விட்டிருக்கிறது 
இன்னும் விடும் .மனித குலத்தை 
கீழே விழுந்துவிடாமல் காக்கும்
 


பிறரை நிந்தனை செய்பவன் தானும் கெட்டு
இந்த உலகிற்கும் கேடு விளைவிக்கிறான். 

 
இந்த உலகில் பாசமும்
வேஷமும் பெருகிவிட்டன.


நேசமும் அன்பும்
அருகிக் கொண்டே வருகின்றன. 

 
அனைவருக்குள்ளும் இருக்கும் இறைவனை
நாம் அனைவரும் அனுதினமும் பிரார்த்திப்போம்


அசுத்தம் அடைந்த மனங்கள்
சுத்தமாக அவன் அருள் புரியட்டும். .


இந்த உலகில் அகந்தை கொண்டோரின்
ஆதிக்கம் பெருகிக் கொண்டே போகிறது

 

சகிப்பு தன்மையற்ற அரக்கர் கூட்டம்
அப்பாவிகளையும், குழந்தைகளையும்,
பெண்களையும் சகட்டு மேனிக்கு
கொன்று குவிப்பதில்  இன்பம் காணுகின்றன.

 

இருந்தாலும் இந்த நிகழ்வுகளில்
இறைவன் தலையிடும் நேரம் வரவில்லை.

 

ஏனென்றால். இன்னும் உலகின் பல பகுதிகளில்
மன சாந்தியைத் தரும் ஆன்மீகத்தை நாடி
கோடிகணக்கான மக்கள் சென்றுகொண்டிருக்கிரார்
கள்.

உண்மையான பக்தர்களை
இறைவன் எப்போதும் எந்நிலையிலும்
கைவிடமாட்டான். என்பது சத்தியம். 


பலர்  துன்பம் நீங்க 
இறைவனை நாடுகிறார்கள். 

ஒரு சிலரோ பிறருக்கு துன்பம் விளைவிக்க 
இறைவனை வேண்டுகிறார்கள். 

நமக்கு துன்பம்  வருகிறது என்றால்
அது நம்முடைய நம்பிக்கையின் குறைபாடே அன்றி
இறைவனின் அசட்டையன்று என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

1 கருத்து: