செவ்வாய், 20 ஜனவரி, 2015

ஆனந்தம் அடையும் வழி

ஆனந்தம் அடையும் வழி

 ஆனந்தம் அடையும் வழி 

காடு மலை  எல்லாம்
இரவு பகல் பாராமல்
கணக்கற்ற முறை பறந்து திரிந்து

 

மலர்ந்த மலரின் உள்ளே புகுந்து
சுரக்கும் தேனை உறிஞ்சி
கூட்டில் கட்டி கட்டியாய் தேனடை
சேர்க்கும் தேனீ.

ஐயோ பாவம் !ஆனால் அதை
சுவைத்து இன்புறுமோ ?
யாரோ ஒருவன் கூட்டிற்கு தீ
வைத்து அவைகளை விரட்டியும்
கொன்றும் தேன் முழுவதையும்
கொள்ளை அடித்து சென்றிடுவான்.

மனிதர்களே ,விழிக்கும் நேரமெல்லாம்
உழைத்து காசை சேர்க்க பாடுபடுவார்
பல மனிதர்கள் இவ்வுலகில்
சிலரோ உறக்கத்தை விட்டொழித்து
பணத்தை சேர்ப்பார் .

பொய்யான இன்பத்தை அடைந்திடவே
நம்மோடு என்றும் வராத தங்கத்தையும்
வீடு முழுவதும் நிறைக்கும் பொருட்களையும்

 

வீட்டில் வாங்கி நிரப்பினால் இன்பம்
தருவதாக ஆசை காட்டும்
பேய்க் குணம் கொண்ட காசு பிசாசை
நம்பியவர் எவரேனும் நிலையான
இன்பம் அடைந்தனரோ?

காசைக் கொடுத்து கல்வி கற்று
அந்த கல்வியைக் கொண்டு காசு தேட
உறக்கத்தையும், உடல் நலத்தையும்
விட்டொழித்து எப்போதும் அமைதியில்லா
மனதோடு ,பிறர்முன் நடித்து போலியான
வாழ்க்கை வாழ்ந்து பல கோடிகளை
பன்னாட்டு வங்கிகளில் போட்டு வைத்து
பாஸ் புக்கை பார்த்து பார்த்து இன்பம்
அடைவார் பலபேர் இவ்வுலகில்.

சேர்த்த காசு போடும் வட்டிகளைக்
கண்டு மட்டும் இன்புறாமல் ,பசித்தோருக்கு
உணவிட்டு, வறியவருக்கு வாழ்வளித்து
துன்புற்றோர்க்கு உதவி செய்து இன்புற
பழகாதோர்க்கு இவ்வுலகிலும்
அமைதியில்லை மறுவுலகில் அமைதியில்லை.

ஐயப்பா என்றாலும்,
மலையப்பா என்றாலும்
வேலப்பா என்றாலும்,
சிவனப்பா  என்றாலும்
ஈன்றெடுத்த பெற்றோரை
ஈவிரக்கமில்லாமல் முச்சந்தியில் விடுவோரும்
அவர்களின் தியாகத்தை மதியாது முதியோர்
இல்லத்தில் தள்ளுபவர்களும் பெறமாட்டார்
இறைஅருளை என்றென்றும்.

வரும்போது நாம் முற்பிறவியில் சேர்த்த
சொத்துக்களை கொண்டு வர அனுமதியில்லை
இப்பிறவியிலும் அதே சட்டம்தான் என்று
உணராத அறிவிலிகள் தான் மீண்டும்
சொத்துக்களைச் சேர்ப்பார் சொகுசான
வாழ்வை நாடிடுவார். எல்லாவற்றையும்
 

விட்டுவிட்டு மாண்டு போவார்

 Image result for trailanga swami photo

இறைவனை உணர்ந்த பெரியோர்கள்  சொற்படி நடந்தால்
வாழும் இவ்வுலகம் சொர்க்கமாகும், இந்த உடலை
விட்டு நீங்கினாலும் சொர்க்கத்தில் இடம் . கிடைக்கும்

சுயநலம்  விட்டொழித்து ,பிறருக்கு இயன்ற அளவில்
நன்மை செய்து ,அனைத்து  உயிர்களையும்  அந்த
ஆண்டவனின் வடிவென்று உள்ளத்தில் கொண்டு
அவன் நாமத்தை எப்போதும் உச்சரித்து அன்போடு
நடந்து கொண்டால் .ஆனந்தம் நிறைந்திடும் வாழ்விலே.

படங்கள்- நன்றி-கூகுள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக