வியாழன், 8 ஜனவரி, 2015

சிந்தனை சிதறல்கள் (500)

சிந்தனை சிதறல்கள் (500)

சிந்தனை சிதறல்கள் என்ற இந்த வலைபூ
ஏப்ரல் 2012இல்  தொடங்கினேன்.

3 ஆண்டுகள்  முடிவடைவதற்குள்
500 பூக்கள் மலர்ந்துமணம் பரப்பி
விட்டு சென்றுவிட்டன.

எதற்காக இந்த வலைப்பூவை
தொடங்கினேன்?

தமிழுக்காக, தமிழ்மொழியின் சிறப்பை
பிறருக்கு எடுத்துரைப்பதற்கும்
அதே நேரத்தில் நானும் அதன் மாண்பை
சுவைத்து மகிழ்வதற்க்காகவும்
தற்கால தமிழர்களை
தாங்கள் செயல்படும் தன்மையை ஆராய்வதற்கும்
மற்றும் பல செய்திகள் வாழ்க்கையை
வெற்றிகரமாக நடத்த உதவும் பல
அறிய தகவல்களையும் அளித்துள்ளேன் .

என்னுடைய பதிவின் முதல் தலைப்பு.

"தமிழே நீ என்றும் இருப்பாய்" என்பதுதான்

தமிழும் இருக்கிறது. நாமும் இருக்கின்றோம்.
நாம் இந்த மண்ணை விட்டுப் போனாலும்
தமிழ் இருக்கும்.

இந்த வலைபூவிற்கு வரும் வாசகர்கள் மிகவும் குறைவுதான்.
ஆனால்  வருகை தந்தவர்கள் அனைவரும் நல்முத்துக்கள்
தங்களுக்கு இருக்கும் பல பணிகளிடையே தவறாமல் அவ்வப்போது வந்து
தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு என்னை உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி.

இன்று தமிழ் உலகம் முழுவதும் தன் பெருமையையும் மாண்பையும்
பரப்பி மலர்ந்து மணம்  வீசிக்கொண்டிருக்கிறது.



அது போதும் எனக்கு .என் பணியை தொடர

1 கருத்து: