செவ்வாய், 18 செப்டம்பர், 2018

இசையும் நானும் (329)-திரைப்படம்-கலங்கரை விளக்கம் – 1965 பாடல்::பொன்னெழில் பூத்தது புது வானில்!


இசையும் நானும் (329)-திரைப்படம்-கலங்கரை விளக்கம்  – 1965

பாடல்::பொன்னெழில் பூத்தது புது வானில்!




MOUTHORGAN VEDIO(329)


இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
பாடல் வரிகள்- கண்ணதாசன்
பாடியவர்கள்-TMS-P.Suseela


சிவகாமி...! சிவகாமி...! பொன்னெழில் பூத்தது புது வானில்! வெண்பனித் தூவும் நிலவே நில்! என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை சென்றது எங்கே? சொல்... சொல்... சொல்...! பொன்னெழில் பூத்தது புது வானில்... தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்! எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்! முன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில் உன் பட்டுக் கை படப் பாடுகிறேன்! பொன்னெழில் பூத்தது புது வானில்... முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சக்கரை அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே? அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே? கிண்ணம் நிரம்பிட செங்கனிச் சாறுண்ண முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே? பொன்னெழில் பூத்தது தலைவா வா! வெண்பனித் தூவும் இறைவா வா! உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை வந்தது இங்கே! வா... வா... வா...! பொன்னெழில் பூத்தது தலைவா வா... தென்னவர் மன்றத்து செந்தமிழ்ப் பண் கொண்டு வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு! வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு! மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாள் என்று சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு! பொன்னெழில் பூத்தது தலைவா வா... என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின் என்னிடம் கோபம் கொள்ளுவதோ? என்னிடம் கோபம் கொள்ளுவதோ? ஒன்றில் ஒன்றான பின் தன்னைத் தந்தான பின் உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ? பொன்னெழில் பூத்தது தலைவா வா!




1 கருத்து: