சனி, 23 ஏப்ரல், 2016

சிந்தியுங்கள் அன்பர்களே !

சிந்தியுங்கள் அன்பர்களே !


சிந்தியுங்கள் அன்பர்களே !


பரியாய் உருவெடுத்து  அதன்மேல்
பரிமேலழகனாய் பாரிலுள்லோரை
காக்க பவனி வந்தவனும் அவனே

Image result for kallazhagar

உறியில் வைத்திருந்த வெண்ணையை
உள்ளங்கைகளால் எடுத்து  ஆயர்குல
சிறுவர்களோடு திருடி உண்டு மகிழ்ந்த
கோகுலக் கண்ணனும் அவனே



கரிய யானையை காலன் வடிவில்
வந்த முதலையின் பிடியிலிருந்து
காத்தருளிய ஹரி பகவானும் அவனே

Image result for gajendra moksham

பக்தனைக் காக்க நரிகளையெல்லாம்
பரிகளாக மாற்றிஅருள் செய்த
பரமசிவனும் அவனே

Image result for manickavasagar in tamil

கல்லையே கடவுளாக கண்டு தன்
கண்ணை கொடுக்க வந்த கண்ணப்பனுக்கு
தன்னையே கொடுத்தருளிய
காளத்திநாதனும் அவனே

Image result for srikalahasti temple images

விண்ணும் மண்ணும் படைத்தவன்
நம்  கண்ணுக்கு கண்ணாய்  இருப்பவன்
மண்ணிலும் விண்ணிலும் நம்மை விட்டு
என்றும் பிரியாமல் இருப்பவன்
என்று எல்லாமாய் அவன் இருக்கையில்
எல்லாம் நான்தான் என்ற எண்ணம்
ஏன் வந்தது ?

சிந்தியுங்கள் அன்பர்களே !

Image result for manickavasagar in tamil

நம் இதயம் என்னும் அரங்கத்தில்
நடனமாடுபவனும் சிதாகாசத்தில்


மெடல் ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

வீற்றிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும்
நம் சிந்தையில் எப்போதும் இருந்தால் போதும்
சித்தம் தெளிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக