சனி, 8 நவம்பர், 2014

எதிர்கால கோட்டை கட்டி...

எதிர்கால கோட்டை கட்டி...

கணத்திற்கு கணம் மாறும்
குணம் கொண்ட மனம் 

எதிலும்  நிலைக்காது
எங்கோ அலையும்  மனம்

சிலையிலும் நிற்கவில்லை
சிந்தனையிலும் நிலைக்கவில்லை

உலையில் போட்ட  அரிசி போல்
கொதிக்கிறது உள்ளம்

நாள்தோறும்  மன  நிம்மதியை
சிதைக்கவே எப்போதும்
காத்திருக்கும் சுற்றங்கள்

புதை குழியில் எப்போதும்
தள்ளி வேடிக்கை பார்க்கும் புலன்கள்

என்ன முயற்சி செய்தாலும்
உள்ளத்தை விட்டு அகல மறுக்கும்
கடந்த கால கசடுகள்

எதிர்கால கோட்டை கட்டி
அதில் கடந்த கால குப்பைகளை
குடி வைத்து நிகழ் கால
வாழ்க்கை இழக்கும் நிலையை
மாற்றிடுவாய் .

புதிது புதிதாக புத்தகங்களை
படித்து அதில் உன்னை தேடினேன்
புரட்டர்களின் உதவியை நாடினேன்

அந்தோ! இறைவா நீ என்னுள்  இருப்பதை அறியாமல்.
இவ்வளவு காலம்

இனியாவது இருக்கும் ஒவ்வொரு கணமும்
உன்னை நினைத்து உண்மையாய்
வாழ்ந்து உயர்நிலை எய்திட அருள் புரிவாய்

2 கருத்துகள்: