புதன், 10 டிசம்பர், 2014

மத மாற்றத்தால் என்ன பயன்?

மத மாற்றத்தால் என்ன பயன்? 

உலகில் பல மதங்கள் உள்ளன.


தரணியில் தன்னைப் படைத்தவன்
ஒருவன் இருக்கின்றான் அவனை
உணர்ந்துகொண்டு உய்ய வேண்டும் என்பதற்காக
பல தீர்க்கதரிசிகளால் அந்தந்த  கால் நிலைக்கேற்ப
வடிவமைக்கப்பட்டு மக்களிடையே புகுத்தப்பட்டன.

மனிதர்கள் தனியாக வாழாமல் ஒரு கூட்டமாக
சேர்ந்து வந்தால் ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்பதை உணர்ந்த நிலையில் மதம் அவர்களுக்கு இணைக்கும் பாலமாக அமைந்தது.

ஆனால்  அதுவே காலபோக்கில் ஒரு கூட்டம் மற்ற மதத்தை
பின்பற்றியவர்களை தங்கள் கூட்டத்தில் சேர்ப்பதற்கும், எதிர்ப்பவர்களை அழித்து ஒழிக்கும் ஆதிக்க மனப்பான்மையை  வளர்த்து இன்று இந்த உலகம் மத வெறியர்களின் கையில் சிக்கிசின்னா பின்னமாகி  கொண்டிருக்கிறது.

அதனால் இன்று உலக அமைதி கேள்விக்குறியாகிவிட்டது.
பண்பும், அன்பும் ,மற்றவரோடுஇசைந்து  வாழும் இனிய குணமும் ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலிருந்தும்  எங்கோ போய்விட்டது.

மத மாற்றங்கள் எந்த பயனையும் விளைவிப்பதில்லை.
அது மனிதர்களை ஒரு குறிப்பிட்ட வளையத்திற்குள்  சிக்க வைத்து விடுகிறது

உடைகளை மாற்றிக்கொண்டாலும், புற சின்னங்களை மாற்றிக்கொள்வதாலும் பலன் ஏதும் விளையப்போவதில்லை.

எந்த மதத்தை சார்ந்தவர் எனினும் எல்லோருக்கும் ஒரே இறைவன் ஒன்றே என்ற சீரடி சாயி பாபாவின் கொள்கை ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்தால்தான் வேற்றுமை எண்ணங்கள் ஒழியும்.மற்ற மதத்தினரை வெறுப்புடன் பார்க்கும் எண்ணம் விலகும்.

அதிலிருந்து அவர்கள் வெளி வருவது மிகவும் கடினம்

நம்மைப் படைத்த இறைவன்தான் தீய எண்ணம் கொண்டவர்களின் இதயத்தில் அன்பை விதைக்க வேண்டும். இல்லாவிடில் மனித குலத்தின்
துன்பங்களுக்கு தீர்வு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக