சனி, 30 மே, 2015

அனைத்து தீமைகளின் ஆணி வேர் எது?

அனைத்து தீமைகளின் ஆணி வேர் எது?

இந்த உலகில் யாரும் சுகமாக இல்லை .
அப்படி சில பேர்கள் சுகமாக இருந்தாலும் 
அந்த சுகம் நிலைப்பதில்லை 

அப்படி நிலைத்தாலும் அதை சிலர் நிலைக்க 
விடுவதில்லை. 

இந்த நிலை இந்த உலகம் தோன்றிய நாள்முதல் 
அப்படியேதான் இருக்கிறது. 

இதில் மாற்றம் எதுவுமில்லை. 

ஒரு சிலர் முயற்சி செய்து 
வாழ்வில் முன்னேறுகிறார்கள். 

ஆனால் இன்று பலரோ குறுக்கு வழியில் 
அதை அடைய முயற்சி செய்கிறார்கள். 

அனைத்திற்கும் அடிப்படை காரணம் 
சுயநலம்தான். 

என்னதான் நேர்மையைப் பற்றி வாய் கிழிய 
பேசினாலும் தனக்கென்று வரும்போது 
நேர்மை அடங்கி ஒடுங்கி காணாமல் 
போய்விடுகிறது. 

நேர்மையாக வாழ நினைப்பவர்கள் 
அனைவராலும் சிறுமைப் படுத்தப் படுகிறார்கள். 

சமுதாயம் அவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்று 
முத்திரை குத்தி  மூலையில் தள்ளிவிடுகிறது. 

சுயநலம்தான் ஒவ்வொரு மனிதனையும் 
லஞ்சம் கொடுக்கச் சொல்கிறது. சட்ட விதிகள் 
கட்டுப்பாடுகளை மீறச் செய்கிறது. 

சுயநலம்தான் மற்றவர்களின் உழைப்பை 
சுரண்ட வைக்கிறது. 

குறுக்கு வழியில் பணக்காரன் ஆகியவன் 
மற்றவர்களை அடிமைப்படுத்தி அவர்களை சுரண்டி 
அவர்களை தொடர்ந்து தன்  கட்டுப்பாட்டிலேயே 
வைத்துக் கொள்கிறான். 

இந்த கூட்டத்தில் அரசியல்வாதிகள், நடிகர்கள், 
மற்றும் பணக்காரர்கள்,சமூக  விரோதிகள் அடங்குவர். 

இவர்கள் தங்களை நிலை நிறுத்துவதற்காக 
என்ன  வேண்டுமானாலும் செய்பவர்கள். எதை வேண்டுமானாலும் 
காரணம் காட்டுவார்கள். 

அனைத்திற்கும் காரணம் ஜாதிதான் என்பார்கள் சில நேரம் 
சில நேரங்களில் ஆளும் கட்சிதான் காரணம் என்பார்கள்.
சில நேரங்களில் மதவெறி அவர்களுக்கு கை கொடுக்கும்.  

ஆனால் தங்கள் ஆதாயத்திற்காக யார் கூட வேண்டுமானாலும் கூட்டு சேர்ந்து கொள்வார்கள். அப்பாவி மக்கள் அவர்கள் 
கூறுவதை உண்மை என்று நம்புவார்கள் 


சாமானிய மனிதர்களுக்கு இவர்கள் செய்யும் 
தந்திரங்கள் .  புரியாது 

வாய் சொல்லில் வீரர்களாக விளங்கும் இவர்கள் 
விரிக்கும் வலையில் விழுந்த உழைக்கும் வர்க்கம் 
தாங்கள் பிழைப்பதர்க்கே இவர்கள்தான் காரணம் என்று நம்பி 
சிந்திக்கும் திறனை இழந்ததுதான் அனைத்திற்கும் காரணம். 

உணர்ச்சிகளுக்கு  அடிமையான அடித்தட்டு மக்கள் 
எது உண்மை எது பொய் என்று சிந்திக்கும் நிலை 
வரும்போதுதான் அவர்களுக்கு உண்மையான 
வாழ்வு மலரும். 

அதுவரை. ......





2 கருத்துகள்:

  1. அனைத்து தீமைகளின் ஆணி வேர் எது?
    அனைத்திற்கும் அடிப்படை காரணம்
    சுயநலம்தான்.
    உண்மை தான்!
    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. எங்கும் எதிலும் எப்போதும் சுயநலம் தான்...

    பதிலளிநீக்கு