திங்கள், 1 அக்டோபர், 2018

காந்தி மகானின் பிறந்த தினம்.

காந்தி மகானின்  பிறந்த தினம். 


150 ஆவது பிறந்த தினம் இவ்வுலக
மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு
திதி கொடுப்பது போல் ஒரு சடங்கு.

கைராட்டை நோற்பது போல் ஒரு
போஸ்.
அவர் சிலைகளுக்கு மாலை போட்டு
மலர் தூவுவதுபோல் ஒரு போஸ்
அவர் சமாதியில் மலர் வளையம்
வைத்து வணங்குவதுபோல் ஒரு போஸ்.
வைஷ்ணவ ஜனதோ ..ரகுபதி ராகவா ராஜாராம்...
இத்துடன் ஒரு நாள் கூத்து. சடங்கு முடியும்.
ஒவ்வொரு ஆண்டும்

படித்த மேல் தட்டு மக்கள் ஓட்டன்பரோவின்
காந்தி படம் பார்த்து விட்டு ஒரு சொட்டு கண்ணீர் விட்டு.
"oh. he is great" என்று சொல்லிவிட்டு புதிய திரைப்படத்திற்கு
ஆன்லைனில் டிக்கெட் புக் பாணனை செல்வது.

பாமர மக்களை அனைத்து  உருப்படாத சானல்களை சினிமாக்காரர்களை வைத்து கூத்தடித்து. பார்க்கவைத்து  இன்றய பொழுதை ஓட்டுவது.

அவர் பிறந்த நாளை அவர் வாழ்நாள் முழுவதும் நேசித்த கொள்கைகளுக்கு
சமாதி கட்டிய தினமாகவும் கொண்டாடினால் பொருத்தமாக இருக்கும்.
1.கள்ளை ஒழித்தது
2. அந்நிய பொருட்களை நிராகரித்தது
3.வாழ்வை  திறந்த புத்தகமாக வைத்துக்கொண்டது.
4. உண்மையை கடைப்பிடித்தது
5.நாணயத்தை ,நேரம் தவறாமையை, நேர்மையை, பிரார்த்தனையை. எளிமையை கடைப்பிடித்தது.
6.ஒழுக்கம்,பெண்கள் பாதுகாப்பு ,மத நல்லிணக்கம் இயற்கை வைத்தியம், சுதேசி தொழில்களை  பாதுகாப்பது..இவற்றை நம் நாட்டில் நிலைநாட்ட சாகும்வரை முயற்சிகள் செய்தது.

அவர் செய்த பல  நல்லவற்றை நிறைவேற்ற முயற்சி செய்யாமல் அவர் மீது எப்போது பார்த்தாலும் எதிரிடையான விமரிசனங்களையே மீண்டும் மீண்டும் மக்களிடையே பரப்பி மிகைப்படுத்துவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக