புதன், 1 அக்டோபர், 2014

கால வெள்ளத்தில் காணாமல் போனவர்களை கண் முன் கொண்டு நிறுத்தியவர்.

கால வெள்ளத்தில் காணாமல் போனவர்களை 
கண் முன் கொண்டு நிறுத்தியவர்.

இன்று அக்டோபர் முதல் நாள்

நானும்தான் பிறந்தேன் எதற்காக ?
எனக்கே தெரியவில்லை

ஆனால் நடிப்பிற்கே இலக்கணம்
வகுத்தவன் ,தலைக்கனம் இல்லாதவன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்
பிறந்த நாள் குறித்து ஒரு பதிவையும் காணோம்



போடாத வேடமில்லை
போற்றாத நாடில்லை
மொழி தெரியாதவனும் போற்றினான்
அவர் நடிப்பை.

காலத்தால் மறக்கப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி
கப்பலோட்டிய தமிழன் .வ.உ சிதம்பரத்தை கண்முன்
கொண்டு நிறுத்தி நம் கண்களிலிருந்து அருவிபோல்
நீரை கொட்டச் செய்தவன்

கொள்ளையர்களான வெள்ளையர்களை  வெளியேற்ற
தூக்கில் தொங்கிய வீர பாண்டிய கட்டபொம்மனை
மறந்துபோன இந்த தலைமுறைக்கு உயிரோடு
நம் கண் முன்  கொண்டு வந்தவன்

இன்னும் எத்தனையோ பாத்திரங்கள்
அவரால் உயிர் பெற்று திரையில் நடமாடின

வாழ்க  அவர் புகழ்

2 கருத்துகள்: