வெள்ளி, 6 ஜூலை, 2012

தற்கொலை

290000

இது என்ன ?

இது வேறொன்றுமில்லை 
செல்வம் கொழிக்கும் மராட்டிய மாநிலத்தில் 
வாழ வழியில்லாமல் 1995 முதல் தற்கொலை செய்து கொண்ட வேளாண்குடி பெருமக்கள்தான்
இந்தியா விவசாய நாடு என்று மார் தட்டி கொள்ளும் அரசியல்வாதிகளின்
தலைமையில் நடைபெறும் ஆட்சிகளின் மாட்சிதான் இந்த எண்ணிக்கை
இது இன்னும் கூடத்தான் இருக்கும்

ஏன் இந்த நிலை ?

எல்லோரையும்போலதான் விவசாயியும் உழைக்கிறான் 
அவன் தனக்காக மட்டுமல்லாமல் தன்னை சுற்றியுள்ள இந்த உலக மக்களுக்காகவும் உழைக்கிறான் 
இருந்தும் அவனை சுற்றியுள்ள இந்த நன்றி கெட்ட  உலகம் அவன் படும் துன்பங்களை என் கண்டும் காணாமல் விட்டு விடுகிறது என்றுதான் புரியவில்லை?

அவன் வட்டிகடைக்காரர்களை மட்டி போல் நம்புவதுதான் இதற்க்கு காரணம்

அவன் பொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து கொள்ளை லாபம் அடிக்கும் இடை தரகர்கள் ஒரு காரணம்

உணவு பொருட்களை கொண்டு செல்ல பாதை வசதிகள் இல்லாமை ஒரு காரணம்

பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க வசதிகள் இல்லாமை ஒரு காரணம்..

அவர்களிடையே ஒற்றுமை  இல்லாமை ஒரு காரணம்

இப்படி அடுக்கிகொண்டே போடலாம்

இனி மேலாவது அரசியல்வாதிகள் எனும் மண் குதிரைகளை மட்டும் நம்பாமல் அவர்களுக்கு என கிராமம்தோறும் அமைப்பபுகள்
அமைத்து உருப்படும் வழியை பார்த்தல் நல்லது..  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக