புதன், 9 ஜனவரி, 2019

காணாமல் போய்விட்ட நாதஸ்வரம்

காணாமல் போய்விட்ட நாதஸ்வரம்

સંબંધિત છબી


தமிழ்நாட்டின் பாரம்பரியமான நாதஸ்வரம்
இன்றுகாணாமல் போய்விட்டது.

எங்கு பார்த்தாலும் குத்து திரைப்பட பாடல்கள்தான் காதைக்
கிழிக்கிறது

முன்னொரு காலத்தில் திருவாடுதுறை.ராஜரத்தினம், வேதாரண்யம் வேதமூர்த்தி ,என்.பி.என்.பொன்னுசாமி, காருகுறிச்சி .அருணாச்சலம் ,நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் ,பொன்னுத்தாயி போன்ற பல மேதைகள் நாதஸ்வர  உலகில் கோலோச்சிய கோலோச்சிய காலம் மலையேறி போய்விட்டது.

கோயில் திருவிழாக்களிலும் திருமண மேடைகளில் தாலி  கட்டும்போது கெட்டி மேளம் அடிப்பதற்கும் நாதஸ்வரம்  பயன்படும். நிலைக்கு மட்டும் வந்துவிட்டது.

ஆனால் ஸ்ரீலங்காவில் மக்கள் மிகவும் விரும்பி ரசிக்கும்இசைக் கருவிகளில் ஒன்றாக நாதஸ்வரம் இருந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு காணொளியைக் கண்டேன். திரைப்பட பாடல்களை எவ்வளவு அருமையாக இசைக்கிறார்கள்! நீங்களும் அதை கேட்டு இன்புறுங்கள்.

images courtesy-google images

4 கருத்துகள்:

  1. காணாமல் போய்விட்ட பல பொக்கிஷங்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல் ஆண்டு காலம் மிகவும் அரும்பாடுபட்டு பயிற்சி எடுத்து நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கும் கலைஞர்களுக்கு ஊக்கம் தரப்படவேண்டும்.

      நீக்கு
  2. ஆமாம் ஐயா.... நாதஸ்வர இசை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது வேதனை...

    இந்த கலைஞர்கள் இசையைக் கேட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாதம் மற்றும் ஸ்வரம் இரண்டும் இணைந்து ஒலிக்கும் நாதஸ்வரம் ஒரு தெய்வீக இசைக்கருவி. திருவிழாவாகட்டும் மணவிழாவாகட்டும் நாதஸ்வரமும் தவிலும் அதை கேட்பவர்களுக்கு ஒரு சக்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. விழாக்களில் ஒவ்வொரு நிகழ்விற்கும் ராகங்களும் ,பாடல்களும் அமைந்துள்ளது அதை நேரில் கேட்கும்போது உண்டாகும் மன நிறைவுக்கு ஈடு இணை கிடையாது முன்னாளில் இரவில் தொடங்கிய நாதஸ்வர கச்சேரிகள் விடியும் வரை நடக்கும். மக்களும் ஆர்வத்தோடு கேட்பார்கள். முடிவில் "ஆடு பாம்பே" என்ற மகுடி பாடல் இசைக்கும்போது பாம்பே படமெடுத்து ஆடுவதுபோல் ஒரு பிரமிப்பைஏற்படுத்தும்.சிறு வயதில் அதை அனுபவித்திருக்கிறேன். .

      நீக்கு