Thursday, January 10, 2019
எல்லாம் முருகனே !
எல்லாம் முருகனே !
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்.
எனக்கு எல்லாம் முருகனே (எல்லாம்)
தொல்லை மிகு இவ்வுலகில்
கவலை மாற்றி எல்லையில்லா
இன்பம் தருவது அவன் திருநாமமே (எல்லாம்)
அரோஹரா என்றாலும்
ஆறுமுகம் என்றாலும் அன்போடு
அழைக்கும் அடியவனுக்கு அழியா
பதம் அருள்வான் (எல்லாம்)
கந்தா என்றாலும்
கார்த்திகேயன் என்றாலும்
முத்துக்குமரா என்றாலும்
உள்ளம் புகுந்து கள்ளம் அகற்றி
அமைதியும் ஆனந்த வாழ்வும்
அருள்வான். (எல்லாம்)
மயிலும் சேவலும் பாம்பும் அவன் திருவடியில்
பகை மறந்து பயமின்றி இருப்பதுபோல்
வணங்குவோர் வாழ்விலும் பகையில்லா
நட்பும் சுற்றமும் அருளிடுவான்
குன்றின் மீது நின்றருளும் தெய்வம் அவன்
நினைப்பவர் இதய கோயிலில் நிலைத்து நின்று
வழி நடத்தும் துணைவன் அவன் (எல்லாம்)



