செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

இசையும் நானும் (124)

இசையும் நானும் (124)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  124வது  காணொளி 



மவுத்தார்கன் இசை -தமிழ் 

திரைப்படம்- கற்பகம்

அத்தை மடி மெத்தையடி - athai madi methayadi

அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா 
ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா 

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி 
முல்லை மல்லிகை மெத்தையிட்டு 
தேன் குயில் கூட்டம் பண்பாடும் 
மான்குட்டி கேட்டு கண் மூடும் 

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை 
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை  
அன்றோர் கோவிலை ஆக்கி வைத்தேன் 
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்




செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

உண்மையான ரட்சா பந்தன் !

உண்மையான ரட்சா பந்தன் !


தற்காலத்தில் அனைத்து பெண்களையும்

போகப் பொருளாக எண்ணாமல் சகோதரிகளாக

எண்ணி பெருமைப்படுத்தும் கலாச்சாரம் "ரட்சா பந்தன்" என்று

கொண்டாடப்படுகிறது.

ஆனாலும்  இந்த நல்ல சிந்தனையை கொச்சைப்படுத்தி

சமூகத்தில் கேடு விளைவிக்கும் பல ஈன பிறவிகள்

எல்லா இடத்திலும் உண்டு.

அவர்கள் கீழ்க்கண்ட காணொளியைக் கண்ட பின்பாவது திருந்தினால் நம் மனித சமூகம் பிழைக்கும்.



https://www.facebook.com/sbsf47/videos/1589178304664355/

பனி படர்ந்த மலையின் உள்ளே பனி படர்ந்த மலையின் உள்ளே

பனி படர்ந்த மலையின் உள்ளே

பனி படர்ந்த மலையின் உள்ளே 

பனி படர்ந்த மலையின் உள்ளே





பாங்காய் அமர்ந்திருக்கும் பரமசிவன்




வேங்கடவன் போல் மலைமேல்  நின்று
காட்சி தரும் நாளும் வருமோ !
காட்சி தரும் நாளும் வருமோ !


அன்பெனும் பிடிக்குள்  அகப்படும் மலையே
அலைபாயும் மனதை அடக்கி உன்னை
அகத்துள் காணும் நாள்தான் வருமோ !
அகத்துள் காணும் நாள்தான் வருமோ !

பக்தரெல்லாம் வணங்கி மகிழ 
லிங்க  உருவில்  வடிவம்  கொண்டாய்
மூர்த்தி வடிவில் கோயிலில் நின்றாய்
அன்புடன் அனைத்து பூஜைகளை ஏற்றாய்
ஆன்ம ஒளியாய் உன்னை கண்டு
மகிழும் காலம் என்று வருமோ !
மகிழும் காலம் என்று வருமோ !




           தி. ரா ..பட்டாபிராமன் 

திருஆலங்காட்டில்   களி நடனம் ஆடும் தேவா
என் சிந்தையில் எப்போதும் நடனமிடும் தேவா
இதயத்தில் உள்ளே உந்தன் ஆடலைக்
கண்டு மகிழும்  நாள் என்று வருமோ !
கண்டு மகிழும்என்று வருமோ !

ஞாயிறு, 31 ஜூலை, 2016

இசையும் நானும் (123)

இசையும் நானும் (123)


இசையும் நானும் (123)

இசையும் நானும் (123)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  123வது  காணொளி 



மவுத்தார்கன் இசை -தமிழ் 


Image result for vaadikkai maranthathum yeno


திரைப்படம்- கல்யாண பரிசு 

பாடல்-வாடிக்கை  மறந்ததும் ஏனோ 

வெள்ளி, 29 ஜூலை, 2016

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம் 



                                     ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


சத்குரு நாதன் திருப்பாதம்தன்னை
எப்போதும் தன் சிந்தையில்
நினைந்திருப்போருக்கு
வாழ்வில் சங்கடம் வருமோ அய்யா

சாத்திரங்கள் பல கற்றாலும்
தோத்திரங்கள் பல செய்தாலும்
ஆத்திரம் கொண்டோருக்கு
வாழ்வில் என்றும் அமைதி உண்டோ

கண்ணுக்கும் புலனுக்கும் புலப்படா
இறை சக்தி நம் முன் வெளிப்படுவது
சத்கு ருவின் திருவடிவமே என்பதை
உணர்ந்துகொண்டு அவன் பாதம்
சரணடைந்தவருக்கு துன்பம்ஏது !
துயரேது !

தத்துவம் தெரிந்தும் இறைவனின்
மகத்துவம் புரிந்தும் இன்னல்கள் வரும்போது
அலைபாயும்  மனதுடன் இங்குமங்கும்  ஓடி திரிந்து
பிதற்றி திரிவார் இவ்வுலகில் பலர்.

வினைதான் விதியாய் உருவெடுத்து நம்
வாழ்வில் விளையாடுகிறது என்றும் அதை
அமைதியாய் அனுபவித்து தீர்த்து
அந்த ஈசன் நினைவாகவே இருப்பர்
உண்மை அறிந்தவர்.

சஞ்சலமில்லா மனம் இல்லை
சங்கடமில்லா வாழ்வில்லை
பிணியில்லாத உடல் இல்லை
அவன் அருளின்றி இவ்வுலகம் இல்லை

மங்களம் தரும் மகேஸ்வரியின் பாதம்
பற்றிடுவோம்.
மாயையை அகற்றும்
சத்குருநாதன் அமுத மொழி செவி மடுப்போம்
இன்னல் நீங்கி இன்ப வாழ்வு பெற

வியாழன், 28 ஜூலை, 2016

சின்ன கண்ணன் அழைக்கிறேன் வாருங்கள் !

சின்ன கண்ணன் அழைக்கிறேன் வாருங்கள் !

சின்ன கண்ணன் அழைக்கிறேன்  வாருங்கள் !

சின்ன கண்ணன் அழைக்கிறேன்  வாருங்கள் !

உங்கள் சிதறுண்ட இதயத்தை என்னிடம் தாருங்கள் 

உங்களை சீலமுடன் வாழ வைக்கிறேன் என்று 

உறுதி கூறுகிறேன் .



                                                          ஓவியம் -தி.ரா. பட்டாபிராமன் (1971)

புதன், 27 ஜூலை, 2016

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகை


ஆடி கிருத்திகை 




முருகா என்ற நாமம் தன்னை
முக்காலமும் ஓதி வந்தால்
எக்காலமும் இவ்வுலகில்
தப்பாமல் தகைமையுடன்
இன்பமாக வாழலாம்

அறவழியில் பொருளீட்டி
அற வழி சார்ந்த வாழ்வில் நின்று
அரோகரா அரோகரா என்று
அவன் பெயர் கூறுவோர்க்கு
அடைய இயலாப் பேறு என்று
ஏதும்  இல்லை என்பதை
உணர்ந்திடுவீர்.

அன்போடு அவன் நாமம்
அனுதினமும் ஓதிவந்தால்
அல்லல் தரும் அகந்தைதனை
அறவே அழித்திடுவான்



செந்தூர் கடற்கரையில் குடி கொண்ட முருகன்
துன்பக்  கடலில் வாடும் பக்தர்தனை
கரையேற செய்து வாழ்வில் இன்பம் சேர்ப்பான்


குன்று  தோறாடும் குமரனவன்
குன்றுபோல் குவிந்து நிற்கும்
நம் பொல்லாத வினைகள் தன்னை
பொசுக்கி அழித்திடுவான்

நல்லதோர் இந்நாளில் மாலவனின்  மருகன் தன்னை
உளமார உருகி வேண்டி உன்னதமான வாழ்வு பெற்று
உலகினில் வாழ்ந்திடுவோம்.