வியாழன், 7 நவம்பர், 2013

வினோபா அடிகள்(பகுதி -5)

வினோபா அடிகள்(பகுதி -5)

காந்தியடிகள் விநோபாவின் 
சிறப்புகளை எடுத்துரைத்தார்,



வினோபா சிறந்த சம்ஸ்க்ருத புலவர்

ஆசிரமத்தில் சமையல் வேலையிலிருந்து
தோட்டித்  தொழில் வரையிலும்
சிறப்பாக பணி செய்தவர்

பிறவி மாணவர்
பிறவி ஆசிரியர்

தம் மனதிலிருந்து தீண்டாமையை
முழுவதுமாக ஒழித்தவர்

வகுப்பு ஒற்றுமையில்
தீவிர நம்பிக்கை உடையவர்.

 இஸ்லாமிய சமயத்தை நன்றாக
புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக
ஒருவரிடம் அரபுமொழியைக் கற்றார்

திருக்குரானை மூலத்திலேயே படித்தவர்

.வினோபாவிற்கு ஏராளமான மாணவர்களும்
 சீடர்களும் தோழர்களும்  உண்டு.

அவருக்கு இதைவிட வேறென்ன
தகுதிகள் வேண்டும் என்றார் காந்தியடிகள்

1948 ஜனவரி 30இல்
மகாத்மா காந்தி காலமானார்.



தலைவர் ராஜேந்திர பிரசாத்தும்
 நிர்மாணத் துறையை சேர்ந்த பலரும்
ஒன்றுகூடி  ஆலோசனை நடத்தினார்கள்,.

 மகாத்மா காந்திக்கு நினைவு சின்னம்
எழுப்புவதற்கு ஒவ்வொருவரும்
ஒரு ஆலோசனை கூறினார்கள்.

வினோபா ஒருவரே மகாத்மா காந்திக்கு நாம்
எழுப்ப வேண்டிய நினைவு சின்னம்
சர்வோதய சமுதாயமே என்றார்.



1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள்
ஆந்திர மாநிலத்தில் போச்சம்பள்ளியில்
ஒரு அற்புதம் நிகழ்ந்தது.

அது என்ன?

 நாளை பார்ப்போம்.

(இன்னும் வரும்.)

திங்கள், 4 நவம்பர், 2013

இது தேவையா?

இது தேவையா?

இது தேவையா?
இதற்குப் போய் இவ்வளவு கோடி ரூபாய்
செலவு செய்ய வேண்டுமா?



இந்தியா வறுமை நாடு .
இங்கு உள்ளவர்களுக்கு
உணவு இல்லை, இருப்பிடம் இல்லை,
உறங்க இடமில்லை,சுகாதார வசதி இல்லை.
இப்போது இந்த திட்டத்திற்காக 450 கோடி  ருபாய்
செலவு செய்ய வேண்டுமா?

என்று புலம்பி தீர்க்கின்றன .
சில சுய மரியாதையில்லா பிண்டங்கள்.

 

எல்லாம் இந்த செவ்வாய்  கிரகத்திற்கு
 நம்முடைய விஞ்ஞானிகள் ஏவப்போகும்
ஆராய்ச்சிக்கான செயற்கைக் கோளுக்கு
ஆகும் செலவைப் பற்றிதான்
இப்படி புலம்பி தீர்க்கின்றன சில ஜன்மங்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து
 67 ஆண்டுகள் கடந்துவிட்டது. 

ஆண்ட அரசுகள் மக்களின் 
வறுமையை போக்க 
பல லட்சம் கோடிகளை 
செலவு செய்து விட்டது. 

ஆனால் வறுமை
இன்னும் தீர்ந்த பாடில்லை.

பாடுபடுபவனின் பாடு அப்படியேதான் 
செக்கு மாடுபோல் அங்கேயே 
சுற்றிக்கொண்டிருக்கிறது. 

ஆனால் இந்தலட்சம் கோடிகள் 
 பெரும்பகுதி கேடிகளிடம் 
போய்  சேர்ந்து விட்டது 

அதை அவர்கள் பத்திரமாக ச்விச்ஸ் 
வங்கியில் வைத்து பாது காத்து வருகிறார்கள். 
அடுத்த பிறவியில் அதை எடுத்து கொள்ளலாம்  என்று. 

அது எவ்வளவு என்று கண்டறியவும், 
அதை நம் நாட்டிற்கு கொண்டுவரவும்
 யாருக்கும் நாதியில்லை. 

ஆண்டுதோறும் புதிதிதாக நோய்கள்
 உண்டாவதைபோல் புதிதாக ஊழல்கள்
புற்றீசல்போல் நிற்காது
வந்து கொண்டிருக்கின்றன.

 சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம்,
லட்சம் என்ற நிலை
 மாறி லட்சம் கோடி என்று
முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

இவைகளை கணக்கில் வைத்து பார்க்கும்போது
இதுபோன்ற திட்டங்களுக்கு ஆகும் செலவு கணக்கில்
கொள்ள தேவையே இல்லை

நம் நாட்டில் ஊழல்
இல்லாத துறையே கிடையாது.

ஊழல் செய்யாத
அரசியல்வாதிகளே கிடையாது.

நம் நாட்டின் மானத்தை ஒவ்வொரு நாளும் 
உலக அரங்கில் கப்பலேற்றிக்கொண்டிருக்கும்
நம் அரசியல்வாதிகளை விட கோடி மடங்கு 
நம் விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

அவர்கள்தான் நம் நாட்டின் பெருமையை 
உலகத்தை தாண்டி அண்டங்களிலும்
 பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

தமிழ் நாட்டில் ஒரு மாதத்திற்கு
நம்முடைய குடிமகன்கள் 2000 கோடி ரூபாய்க்கும்
அதிகமாக குடித்து ஒழிக்கிறார்கள்.

வறுமை என்று ஒரு வரையறையை 
என்றும் வகுக்க முடியாது.
அது ஒரு பேத்தல். கணக்கு

இருப்பவனும் இல்லை என்கிறான். 
இல்லாதவனும் இல்லை என்கிறான். 
வறுமையை என்றும் ஒழிக்க முடியாது.

எல்லா பணக்கார நாடுகளிலும்,பிச்சைக்காரர்களும்,
 நாடோடிகளும், ஏழைகளும், நடைபாதையில் 
வசிக்கும் மக்களும்  உண்டு. 

எனவே நம்முடைய விஞ்ஞானிகளின்
முயற்சியை மனம் திறந்து பாராட்டுவோம்.
வெற்றி பெற வாழ்த்துவோம். 

வியாழன், 31 அக்டோபர், 2013

பழமொழியும்-புதுமொழியும்

பழமொழியும்-புதுமொழியும் 

இரும்பு பிடிச்சவன் கையும்
சிரங்கு பிடிச்சவன் கையும்
சும்மா இருக்காது.-பழமொழி 





டிவி  ரிமோட்  பிடிச்சவனின் கை விரல்களும்



கைபேசி பிடிச்சவன் கைவிரல்களும்
சும்மா இருக்காது -புதுமொழி 



கந்தை துணியானாலும்
கசக்கி கட்டு -பழமொழி



அழுக்கு துணியானாலும்
அயன் பண்ணிப் போடு -புதுமொழி 

சூதும் வாதும்
வேதனை செய்யும்-பழமொழி

சூதும் வாதும் அரசியலில்
உயர்வு தரும்-புது மொழி 

பலநாள் திருடன்
ஒருநாள் அகப்படுவான் -பழமொழி 

அகப்பட்டாலும் அடுத்த நாள்  ஜாமீனில்
வெளிவந்துவிடுவான் -புதுமொழி 

கரும்பு தின்னக் கூலியா?(பழமொழி)

கரும்பு தின்னால் கூலி தரவேண்டும்
நீரிழிவு நோய்க்காரர்கள் (புதுமொழி)

வைத்தியனுக்கு கொடுப்பதை
வாணியனுக்கு  கொடு  -பழமொழி.

வாணியனுக்கு  கொடுப்பதை
வைத்தியனுக்கு கொடு (புதுமொழி)

pic-courtesy-google images 

தீபாவளி சிந்தனைகள்

தீபாவளி சிந்தனைகள்




மற்றவர்கள் பட்டாசு வெடிப்பதற்கு
தங்கள்  கையில் உள்ள
காசைக் கொடுக்கவேண்டும்.



பட்டாசு தயாரிப்பவர்கள்
பட்டாசு தயாரிக்க பிழைப்புக்காக தங்கள்
உயிரையே கொடுக்க வேண்டியிருக்கிறதே !



ஒளியைச் சிந்தும் வாணங்கள்
காண்போர் மனதில் ஊட்டும் உவகை
அதிலிருந்து எழும் புகையோ
வானில் முட்டி ஓட்டை போடும்
நம் உயிரைக் காக்கும் காற்றுப்படலத்தில்



சர  வெடிகளின் ஒலியோ
காதை  பிளக்கும்
ஏற்கெனவே கைபேசியினால்
அரைச் செவிடாய்ப்
போன மானிடம்  முழுசெவிடாய்
போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை



வயிறுமுட்ட பலகாரங்கள்,
இனிப்புக்கள் தின்பார் மக்கள்



அதை சீரணிக்க லேகியமும்
கணக்கின்றி மாத்திரை வில்லைகளையும்
ஜெல்களையும் உள்ளே தள்ளி
ஏப்பம் விடுவார்கள்  "உணவே மருந்து
மருந்தே உணவு" என்ற
தொலைகாட்சி தொடரைப் பார்த்துக்கொண்டே



புத்தாடை உடுத்தி இன்பம் காண்பார்
புதுமணத் தம்பதிகள்

பொன்னகைகள் பூட்டிய நகைகளோடு
முகத்தில் புன்னகை பூக்க
பூவையர்கள் வலம்  வருவார்.



வெடியினால் வேடிக்கையும் உண்டு


வாடிக்கையான விபத்துக்களும் உண்டு



காண்போர்க்கு இன்பமும் உண்டு
விபத்தினால் வாழ்வும் இன்பமும்
இழந்து அல்லல்படுவோரும் உண்டு
இந்த அவனியிலே

இன்பம் துன்பமும் இணைந்ததுதான்
இவ்வுலக வாழ்க்கை

இருளை ஓட்டும்
ஒளித்திருநாளே  நீ வாழி.!



ஒளியாய் உறையும் இறைவனை
உணர்த்தும் தீப ஒளித்திரு  நாளே
நீ என்றென்றும் வாழி!

pic.courtesy-google images

தீபாவளி சிரிப்பு

தீபாவளி சிரிப்பு 

காமடியில் ஒரு காமடி 


தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 





ஒளி இருளை அகற்றுகிறது
ஒலி  இன்பம் தருகிறது.

அகல் விளக்கில் ஏற்றும் தீபம்
ஒளி தருகிறது .இருளை ஒட்டுகிறது

வெடிகள் ஒளியையும் ஒளியையும்
சேர்ந்து தந்து நம்மையெல்லாம்
மகிழ்விக்கின்றன

ஒளியாயும் ஒலியாயும் இருக்கும்
இறைவனை வணங்கி அனைவரும் அன்போடு
அனைத்து  அறியாமையும் நீங்கி இன்புற்று வாழ்வோம். 

செவ்வாய், 29 அக்டோபர், 2013

நர்மதை பெற்ற நகர் (8)(வீரமங்கை ராணி துர்காவதி)

நர்மதை பெற்ற நகர் (8)

நர்மதை பெற்ற நகர் (8)(வீரமங்கை ராணி துர்காவதி)


 வீர மங்கை ராணி துர்காவதி 
போரில் மட்டுமல்ல நிர்வாகத்திலும் மட்டுமல்ல 
,புலவர்களை ஆதரிப்பதிலும் அவளுக்கு
 யாரும் நிகரில்லை என விளங்கினாள் 

அவளது அரசவையை கோக்மகாபாத்ரர்
,நர்வர்   முதலிய கவிஞர்கள்  அலங்கரித்தனர். 


ஒரு கவிதையால் மனம்  கவரப்பட்ட 
இந்த ராணி அந்த கவிதையை இயற்றிய கோக்மகாபாத்ரர் என்ற கவிஞருக்கு ஒரு கோடி  ரூபாய் பரிசு அளித்தாளாம் .!



சுமார் 15 ஆண்டுகள் கோண்ட்வானா என்ற 
இந்த பிராந்தியத்தை ஆண்டுவந்த துர்காவதி மீது 
பொறாமை கொண்டார் டில்லி பாதுஷா அக்பர் சக்ரவர்த்தி. 

நூல் நூற்கத்தான்  பெண்கள் லாயக்கு 
தகுதி உடையவர்கள், அரசாள தகுதியற்றவர்கள் 
என்ற கருத்து அவருக்கு. அரசியை ஏளனம் 
செய்யும் வகையில்  ஒரு தங்கத்தால் செய்த 
கைராட்டை ஒன்றை அனுப்பிவைத்தாராம். 


களம் பல கண்ட இந்த வீரப் பெண்மணி 
இதைக் கண்டு அஞ்சவும் இல்லை 
,மனம் தளரவும் இல்லை 

துப்பாக்கி ஏந்தும் தன் இரு கரங்கள் 
துர்பாக்கியவசத்தால் இராட்டையில் நூல்
நூற்க முற்ப்பட நேரிடின் அச்சமயம் நூலுக்கு
 வேண்டிய பஞ்சை அடித்துக் கொடுக்கும் 
முதல் கூலியாளாக அந்த அக்பர்தான் 
இருக்கமுடியும்  என்ற கருத்தில் 
தங்கத்தினால் பஞ்சு அடிக்கும் வில்
 ஒன்றைத் தயாரித்து  அக்பர் சக்ரவர்த்திக்கு 
அனுப்பிவைத்தாளாம் 



என்னே அவள் நெஞ்சுறுதி!
என்னே அவள் வீரம்!

இப்படிப்பட்ட வீர பெண்மணிகள் 
வாழ்ந்த நாட்டில் பெண்கள் கோழைகளாக, 
ஆண்களின் போகப்பொருளாக, 
நெஞ்சில் உரமின்றி தன்னைக் கூட 
பாதுகாத்துக்கொள்ள தகுதியற்ற நிலைக்கு 
தள்ளப்பட்டு விட்டதை நினைத்தால்
 மிகவும் வருத்தமாக உள்ளது

.புராணங்களில் பல கொடிய அசுரர்களை 
கொன்று குவித்த நம் தெய்வங்கள் பல
 பெண் தெய்வங்களே.

மேலை நாட்டு நுகர்வோர் கலாச்சாரத்தை 
பின்பற்றிஅதற்க்கு அடிமையாகி  நம் நாட்டு வீர மரபுகளை 
அறிந்துகொள்ளாமல் போனதால் 
வந்ததுதான் இந்த கேடு. 

இன்று எதற்கெடுத்தாலும் ஊடகங்களை நம்பி 
பெண்கள்  அசிங்கப்பட்டுகொண்டு 
இருப்பதைப் பார்த்தால்
வேதனையாக உள்ளது. 

ஊடகங்கள் அவர்களின் அந்தரங்க பிரச்சினைகளை விளம்பரம் செய்து காசு பார்ப்பதில்தான் குறியாக உள்ளன. அவர்களை சகோதரிகளாக, அன்னையாக ,ஏன் ஒரு மனித உயிராகக் கூட மதிக்கசமூகத்தில் உள்ள மக்களின் மனதில் நல்ல  சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதத்தில் செயல்படாமல் உள்ளது மிகவும் வருந்தத்தக்க விஷயம். 

அடுத்து என்ன நடந்தது ?

(இன்னும் வரும்)