சனி, 12 மே, 2018

இசையும் நானும் (295)-திரைப்படம்-செல்வமகள் (1967) பாடல்:: குயிலாக நான் இருந்தென்ன ..


இசையும் நானும் (295)-திரைப்படம்-செல்வமகள்  (1967)

பாடல்:: குயிலாக நான் இருந்தென்ன ..


MOUTHORGAN VEDIO-295


Kuyilaaga Naan Irundhenna Lyrics – Selva Magal Lyrics

Movie Name : 

செல்வமகள்  (1967)

Song Name : 

குயிலாக நான் இருந்தென்ன ..

Music : M.S.VISWANATHAN
Singers : TM Soundararajan, P Susheela
Lyricist : வாலி 



பெ .
குயிலாக நான் இருந்தென்ன 
குரலாக நீ வர வேண்டும் 
பாட்டாக நான் இருந்தென்ன 
பொருளாக நீ வர வேண்டும் 
வர வேண்டும் (குயிலாக)
ஆண் .
பாட்டோடு பொருள் இருந்தென்ன 
அரங்கேறும் நாள் வர வேண்டும் 
உன்னோடு அழகிருந்தென்ன 
என்னோடு நீ வரவேண்டும் 
வரவேண்டும் (பாட்டோடு)

~~@@~~ BG Music ~~@@~~
பெண்  :
செந்தாழை கூந்தலிலே  
செந்தூரம் நெற்றியிலே 
செவ்வாழை பந்தல் தேடி 
மங்கை வருவாள் 
ஆண்  :
கல்யாண மேளம் கொட்ட  
கண் பார்வை தாளம் தட்ட 
பெண் பாவை மாலை சூடும் 
மன்னன் வருவான் 

பாட்டோடு பொருள் இருந்தென்ன 
அரங்கேறும் நாள் வர வேண்டும் 
உன்னோடு அழகிருந்தென்ன 
என்னோடு நீ வரவேண்டும் 
வரவேண்டும்


பெ .
குயிலாக நான் இருந்தென்ன 
குரலாக நீ வர வேண்டும் 
பாட்டாக நான் இருந்தென்ன 
பொருளாக நீ வர வேண்டும் 
வர வேண்டும் 

~~@@~~ BG Music ~~@@~~
ஆண்  :
பொன்மேனி தேர் அசைய  
என் மேனி தாங்கிவர 
ஒன்றோடு ஒன்றாய் கூடும் 
காலமல்லவோ 
பெண்  :
நில்லென்று நாணம் சொல்ல  
செல் என்று ஆசை தள்ள 
நெஞ்சோடு நெஞ்சம் பாடும்
பாடல் சொல்லவோ  


பெ .
குயிலாக நான் இருந்தென்ன 
குரலாக நீ வர வேண்டும் 
பாட்டாக நான் இருந்தென்ன 
பொருளாக நீ வர வேண்டும் 
வர வேண்டும் (3)


வெள்ளி, 11 மே, 2018

இசையும் நானும் (294)-திரைப்படம்-செல்வமகள் (1967) பாடல்:: அவன் நினைத்தானா அது நடக்குமென்று..

இசையும் நானும் (294)-திரைப்படம்-செல்வமகள்  (1967)

பாடல்:: அவன் நினைத்தானா அது நடக்குமென்று..




MOUTHORGAN VEDIO-294


திரைப்படம் : 

செல்வமகள்  (1967)

பாடல் : 

அவன் நினைத்தானா இது  நடக்குமென்று..


பாடியவர்  : T.M. சௌந்தராஜன் ,
வரிகள் : கண்ணதாசன்
இசை-எம் எஸ் .விஸ்வநாதன்

இந்த பாடல் அருமையான பாடல். விஸ்வநாதன் அவர்கள் பியானோ இசையை கையாண்டுள்ளது இந்த பாடலுக்கு ஒரு கம்பீரத்தை தருகிறது. எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு பாடல். டிஎம்ஸ் பாடல் தொடங்கும்போது பாடும் ஹம்மிங் அருமை. 


அவன் நினைத்தானா இது நடக்குமென்று.(அவன்)
அவன் நினைக்குமுன்னே பழம் பழுக்குமென்று.(அவன்) 

நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும் 
அது யாரிடம் என்றா பார்த்து வரும்(நல்ல) 

நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறி வரும் 
அது ஊர்வலம் சென்றா  தேடி வரும் (நெஞ்சின்)

அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான் 
அந்த ஏழை உன் கோயிலை நாடி வந்தான் (அன்று)
நல்ல காவல் கொண்டாய்,நீ கை  கொடுத்தாய் 
அவன் காத்திருந்தான் இன்னும் கனியும் என்று(அவன்)

உன்னை பார்த்தவன் மனதில் பசியிருக்க 
அவன் பார்வையில் ஆயிரம் இசையிருக்க (உன்னை)

நல்ல நேரம் வரும் என்று நினைத்திருக்க 
ஏன் நேற்று வந்தான் உன்னை கலங்க வைக்க (அவன்)




வியாழன், 10 மே, 2018

இசையும் நானும் (293)-திரைப்படம்-பார் மகளே பார் (1963) பாடல்:: அவள் பறந்து போனாளே

இசையும் நானும் (293)-திரைப்படம்-பார் மகளே பார் (1963)

பாடல்:: அவள் பறந்து போனாளே




MOUTHORGAN VEDIO-293


திரைப்படம் : பார் மகளே பார்
பாடல் : அவள் பறந்து போனாளே
பாடகர்கள் : T.M. சௌந்தராஜன் , P.B. ஸ்ரீனிவாஸ்
வரிகள் : கண்ணதாசன்
இசை-எம் எஸ் .விஸ்வநாதன்-ராமமூர்த்தி 



அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரெண்டைக் கவர்ந்து போனாளே (அவள் பறந்து)

என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை 
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரெண்டைக் கவர்ந்து போனாளே

என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே



அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகளானேன் 
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துக் கொண்டாள் 
என் உயிரை எடுத்துக் கொண்டாள் 

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் ரெண்டைக் கவர்ந்து போனாளே!