சனி, 5 டிசம்பர், 2015

தவறு செய்தால் தண்டனை உறுதி

தவறு செய்தால் தண்டனை உறுதி 

ஆம் தவறு செய்தால்
தண்டனை உறுதி

வடிநீர் கால்வாய்களில்
நாள்தோறும் குப்பைகளை கொட்டினோம்.
நீர் செல்லும் வழிகளை அடைத்தோம்.

அதனால் வேறு வழியின்றி
கால்வாய்களில் செல்லும் நீர்
வீதிக்கு வந்தது .அப்படியே நம்
வீட்டிற்குள்ளும் புகுந்தது

வீட்டை நரகமாக்கி நாறடித்தது
இனி அவ்வாறு செய்யமாட்டோம் என்று
உறுதி எடுத்துக்கொள்வோமா ?

பயிர் நிலங்கள் நம்மை வாழ  வைக்கும்
உயிர் நிலங்கள் அதில் வீட்டைக்
கட்டினோம் அந்தோ ! இன்று நீர்
சூழ்ந்து கூழ் கூட கிடைக்காமல்
கதறுகின்றோம் -அரசைக் குறை
கூறி  என்ன பயன்?

ஏரி ,குளம், குட்டை எல்லாம்
காணாமல் போயிற்று -பெய்யும் மழை நீர்
தங்க இடம் இல்லாமல் போயிற்று

ஆற்று படுகையிலே வில்லாக்கள்
கட்டினோம். இன்று அனைத்தையும்
இழந்து ஒன்றும் இல்லாமல் தவிக்கின்றோம்.

இனியாவது மனிதர்கள் தாங்கள்
செய்யும் தவறுகளை திருத்தி கொள்ளவேண்டும்

இல்லை யெனில் நாமிருக்க மாட்டோம்
இவ்வுலகில் இவைகளைக் காண. 

மழையும் மக்களும்

மழையும் மக்களும் 

மழை இறைவன் அளிக்கும் கொடை
அது இடைவிடாது பெய்யும்
அடைமழை ஆனாலும் சரி
கோடையிலே வரும் குளிர்விக்கும்
தூரலானாலும்   சரி.

இறைவன் அளிக்கும் கொடையை
பெற்றுக்கொள்ள நம்மிடம்
பாத்திரம் இருக்கவேண்டும்
ஆனால் பாத்திரம் நம்மிடம் இல்லை
மாறாக ஆத்திரம்தான் வருகிறது

Image result for chennai floods update

வட்டியும் முதலுமாக கிடைத்த
விண் நீரை  பயன்படுத்த வழியை
தேடாது மண் மீது வீணாக கடலில்
ஓடவிட்டுவிட்டு ஒருவர் மீது ஒருவர்
சேற்றை வாரி இறைத்துக்கொண்டு
அழுது புலம்புகின்றனர் ஒவ்வொருவரும்

Image result for chennai floods update

ஓடையிலே வீட்டை கட்டினால்
கோடையிலே வேண்டுமானாலும்
இன்பத்தை தரலாம் ஆனால்
வெள்ளம்   வந்தால் அனைத்தையும் இழந்து
நடைபாதைக்குதான் தான்
போக வேண்டும் என்பதை அறிந்தும்
அசட்டையாய் இருந்தனர்  இந்த மக்கள்

Image result for chennai floods update

ஏரியிலே கட்டிய வீடு ஒருநாள்
நீரில் மூழ்கி விடும் என்பதை எடுத்து
காட்டியதுதான் இவ்வாண்டு
பெய்த பெருமழை .

இறைவனை இகழ்வதை விடுத்து
இயற்கையை பழிப்பதை விடுத்து
இயற்கையுடன் இணைந்து வாழ
கற்றுக்கொள்ள வேண்டும் இந்த
மனித சமுதாயம்

இனியும் திருந்தாவிடில்
வருந்துவதை தவிர வேறு வழியில்லை







செவ்வாய், 24 நவம்பர், 2015

ராமா ராமா என்று நீ பாடு!

ராமா ராமா என்று நீ பாடு!


ராமா ராமா என்று நீ பாடு!





ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன் 


ராமா ராமா என்று நீ பாடு
ராமா ராமா என்று நீ பாடு

மனமே நீ
ராமா ராமா என்று நீ பாடு  (மனமே நீ )

உலகில் ராம பக்தியில்லாதவரை
கண்டால் விலகி ஓடு  (மனமே நீ )

இகபர சுகங்கள் அளிக்கும் இனிய நாமம்
ஆசை கொண்டலையும் மனம்தனை
அசையாதிறுத்தி  நம்மை திருத்தி
நல்வழிப்படுத்தும் நாமம்

வாதனைகளும்  சோதனைகளும்
வாழ்வில் எத்தனை வந்தாலும்
நமக்கு உற்ற  துணையாய்
வந்து காக்கும் நாமம்  (மனமே நீ )

அரிதாய் கிடைத்த மானிட பிறவிதனை
அழியும் பொருட்கள் மீது மோகம் கொண்டு
அழியாது எளிதாய் ஜபித்து உயர்வடைய
உதவுவது ராம  நாமம் (மனமே நீ )

இசையும் நானும்

இசையும் நானும்


இசையும் நானும் 

மவுதார்கன் இசை- ஏழுமலை வாசா என்னை ஆளும் ஸ்ரீனிவாசா 
எந்நாளும் துணை நீயே ஸ்ரீவேங்கடேசா 




காணொளி இணைப்பு.


திங்கள், 16 நவம்பர், 2015

இசையும் நானும் (77)

இசையும் நானும் (77)

இசையும் நானும் தொடரில் என்னுடைய 

77 வது காணொளி. 

MOUTHORGAN-TAMIL-மன  நாட்டிய மேடையில் ஆடினேன் (படம் -மீண்ட சொர்க்கம் )




சனி, 14 நவம்பர், 2015

இசையும் நானும் (76)

இசையும் நானும் (76)

இசையும் நானும் (76)

இசையும் நானும் தொடரில்  என்னுடைய 

76 வது காணொளி 

மவுதார்கன் இசை 

கந்த சஷ்டி ஸ்பெஷல் 

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா 

https://www.youtube.com/watch?v=_YiMnqwjF4c&feature=youtu.be

புதன், 11 நவம்பர், 2015

இசையும் நானும் (75)




இசையும் நானும் (75)

 இசையும் நானும் (75)

இசையும் நானும் தொடரில்
என்னுடைய  75 வது காணொளி

மவுதார்கன் இசை.

T.R.PATTAABIRAMAN-MOUTHORGAN-TAMIL SONG-

மலர்கள் நனைந்தன பனியாலே-(இதய கமலம்)-இசை கே வி மகாதேவன் -வரிகள் கவியரசு-பாடியவர்-இசை குயில்.பி. சுசீலா-

இனிமையான இதயத்தை தொடும் இசை.