கடவுள் என்றால் என்ன?
அது அதுவா அல்லது
அவனா அல்லது
அவளா அல்லது
இரண்டுமா ?
எல்லாவற்றையும் கடந்து உள்ளே
சென்றால் அங்கிருப்பது கடவுள் என்கிறார்கள்.
அதற்கு இந்த உயிர் இடம் கொண்டுள்ள
உடலே ஆலயம் என்கிறார்கள்.
புறத்தே திரியும் நம் மனதை
உள்ளே திருப்பினால் இந்த
உடலுக்குள் இருக்கும் "அதை"
காணலாம் என்கிறார்கள்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில்
புறத்தே ஆலயங்களை நிர்மாணித்தார்கள்.
அதன் கருவறையில் ஒரு வடிவத்தை அமைத்தார்கள்.
இருளில் ஒன்றும் தெரியாமையால் ஒரு தீபத்தை
ஏற்றி வைத்தார்கள்.
அப்படியும் தெளிவாக தெரியாமையால்
சூடத்தை ஏற்றி தெளிவாக வடிவத்தை காணுமாறு
செய்தார்கள்.
அந்நேரம் கோயில் மணி ஒலிக்கச் செய்தார்கள்
அங்கு குழுமியிருந்த அனைவரும் அனைத்தையும் மறந்து.தன்னையும் மறந்து சுற்றுப்புறத்தையும் மறந்து அந்த வடிவத்தின் மீதும் ஒளியின் மீதும்
தங்கள் கவனத்தை சிதறாமல் நிலைக்க செய்தார்கள்.
அந்த குறிப்பிட்ட நொடியில் அடைந்த அமைதியும் ஆனந்தத்தை
தினமும் தங்கள் வாழ்வில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக அனுதினமும் ஆலய வழிபாடு செய்ய சொன்னார்கள்.
இவ்வாறு செய்த புற வழிபாட்டை அக வழிபாடாக செய்து
பழகுமாறு அறிவுறுத்தப்பட்டது.
செய்தவர்கள் தனக்குள் அந்த கடவுளை கண்டுகொண்டார்கள்
செய்யாதவர்கள் இன்னும் ஆலயங்களுக்கு இயந்திரம் போல்
சென்று வந்து கொண்டு இருக்கிறார்கள்.
நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் மனதிற்கு தோன்றிய
கருத்துக்களை பரப்பிக்கொண்டிருக்கிறர்கள்.
இருக்கின்ற காசை எல்லாம் இங்கேயே செலவு செய்துவிடு ஞான தங்கமே
கையில் இருக்கின்ற காசை எல்லாம் இங்கேயே செலவு செய்துவிடு ஞான தங்கமே
உடலை விட்டு உயிர் நீங்கும்போது அதில் ஒரு சல்லிக் காசு கூட உன் கூட வாராது என்பதை உணர்ந்துகொள் ஞானத்தங்கமே
தேவைக்கு அதிகமாய் உடலுக்கும் குடலுக்கும் போடும் காசு உபத்திரவத்தைத்தான் தரும் என்பதை உணராதுபோனால் ஊசி போட்டே கொன்னு போடுவான் மருத்துவன் உன்னிடம் உள்ள காசை எல்லாம் பறித்துக்கொண்டு (இருக்கின்ற)
அதிகமாக ஆசைப்பட்டால் இளமையிலேயே மீசை நரைக்கும் இதயம் வேகமாக துடிக்கும் இன்பம் பறிபோய்விடும் துன்பமே பரிசாக கிடைக்கும் (இருக்கின்ற)
இருப்பதை இல்லாதவரிடம் பகிர்ந்து கொள் பொல்லாதவரைக் கண்டால் நில்லாது ஓடு நல்லவரோடு நட்பு கொண்டு நல்லவை எண்ணி நல்ல செயல்கள்; செய்து நன்றி மறவாமல் வாழ்ந்து நன்மை அடைவாய் மனிதா (இருக்கின்ற)