புதன், 12 செப்டம்பர், 2012

இன்றைய மனிதர்கள்


இன்றைய மனிதர்கள்

இன்றைய மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்?

எப்போதும் தன்னை தவிர பிற மனிதர்களின் 
அந்தரங்கங்களை அறிவதிலேயே காலத்தை கழிக்கிறார்கள்

தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை  அவர்கள் அறிய மாட்டார்கள்
பிறர் மீது குறைகள் காண்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் 
தங்கள் மீதுள்ள குறைகளை பிறர்  சுட்டி காட்டினாலும் 
ஏற்றுக்கொண்டு தன்னை திருத்தி கொள்ள விரும்புவதில்லை 

தனக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத செய்திகளை படிப்பதும், 
அதை மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு விவாதித்து 
நேரத்தை வீணடிப்பதும் 
அவர்களுக்கு கை வந்த கலை

காலை முதல் இரவு படுக்க செல்லும் வரை 
தனக்கு தேவையற்ற செய்திகளை மீண்டும் மீண்டும் கேட்பதும்
, மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்களையே 
சலிக்காமல் பார்த்து நேரத்தை வீணாக்குவதும் 
மின்சாரத்தை வீணாக்குவதும்
இன்றைய மக்களின் அன்றாட  
கடமைகளின் ஒன்றாகிவிட்டது. 

அரசியல்வாதிகள் மக்களுக்காக போராடுவதாக கூறி 
தினமும், வேலை நிறுத்தம், ஊர்வலம், 
என மக்களின் அன்றாட வாழ்வை துன்பதிற்க்குள்ளாக்க்குவது.  
அவர்களின் தினசரி கடமையாகி விட்டது.

ஒவ்வொரு பிரச்சினையும் பெரிதாக்கி 
மக்களை தூண்டி வன்முறையில் ஈடுபடவைப்பதும் 
அவர்கள் செய்யும் தினசரி வாடிக்கையாகிவிட்டது. 
அவர்களின் போராட்டத்தினால் எந்த காலத்திலும் ஏறிய 
விலைவாசிகள் குறைந்ததாக சரித்திரம் இல்லை.
 மாறாக ஆளும் கட்சிகள் நாளுக்கு நாள் 
எல்லாவற்றின் மீதும் வரிகளை விதித்து, 
கட்டணங்களை உயர்த்தி மக்களை துன்பத்திற்கு 
உள்ளாகுவது எந்த காரணம் கொண்டும் நிற்ப்பதில்லை. 
இதை மக்கள் உணராமையால்தான்
 இன்னும் அரசியல் கட்சிகள் மக்களை 
தங்கள் கட்டுபாட்டில் வைத்துகொண்டு 
பிழைப்பை நடத்தி வருகின்றன. 

யாரிடமும் நேர்மை இல்லை .ஆனால் ஊழல் ஊழல் 
என்று திருடனை துரத்தும்  கூட்டத்தோடு 
திருடனும் சேர்ந்து நின்று கொண்டு திருடன், திருடன் 
என்று கூக்குரல் போடுவதுபோல் 
எல்லோரும் ஒன்றாக கூச்சலிடுகிறார்கள். 

பாதிக்கப்படும் பாமர மக்கள் ஒன்று செய்வதறியாது 
திகைத்து போய் நிற்கிறார்கள்

இந்நிலை என்று மாறும்? 

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்


அவர்களில் பெரும்பாலான மக்கள் 
சுயமாக சிந்திக்கும் ஆற்றலை 
அறவே மறந்துவிட்டார்கள் 
யார் எதை சொன்னாலும் 
அப்படியே நம்பிவிடுவது

ஒரு ஏமாற்றுக்காரன் ,அவனுக்கென்று எந்த சொத்துக்களோ 
அல்லது ஏதாவது வருவாய் ஈட்டும் தொழிலோ 
,ஏன் இருப்பதற்கு ஒரு இடம் கூட இல்லாதவனோ, 
ஊடகங்கள்  மூலம் பொய்களை பரப்பி 
பொய்யான கவர்ச்சியான வாக்குறுதிகளை அளிக்கிறான். 
உடனே அதை நம்பி ஒன்றுமே விசாரிக்காமல் 
விளக்கில் விழுந்து மாயும் விட்டில் பூச்சிகள் போல்
தங்களிடம் உள்ள அனைத்து காசையும் அவனிடம் 
ஒப்படைத்து விட்டு அவன் தருவதாக 
சொல்லிய காசை மனதில் நினைத்து 
மனக்கோட்டை கட்டதொடங்கி விடுகின்றனர். 
அவனிடம் எதுவும்  இல்லையே,
அவன் எப்படி தங்களுடைய மூலதனத்தை ரெட்டிப்பாக 
அல்லது பல மடங்கு அதிகரித்து  தருவான் 
என்று ஒருவரும் ஒரு கணம் கூட நினைத்து  பார்ப்பதில்லை
 
அந்த புரட்டனும் ஓரிரண்டு மாதங்களுக்கு
ஒழுங்காக காசை தருகிறான். பிறகு மொத்த
பணத்தையும் சுருட்டிக்கொண்டு இரவோடு 
இரவாக ஊரை விட்டு ஓடிவிடுகிறான். 
பிறகுதான் விழித்து கொள்கிறது 
மூளையில்லா முட்டாள் கூட்டம். 
காவல் துறை, நீதி துறை என்று 
அழுது புலம்பி திரியும் அவல காட்சிகள். 

தினந்தோறும் தமிழ் நாட்டில் அரங்கேறும் காட்சி இது.
ஒவ்வொரு நாளும் ஒரு புரட்டன்
வலை விரிக்கிறான் புதிய கண்டுபிடிப்புகளோடு.
அவன் விரித்த வலையில் சிறிய மீன்களும், 
பெரிய திமிங்கிலம்,சுறா போன்ற மீன்களும் சிக்குகின்றன
திரும்பவும் அதே கதைதான். 
அதே புலம்பல் ,ஒப்பாரி காட்சிகள். 

மக்கள் திருந்தவே மாட்டார்களா?ஏன் ?
அவர்கள் நேர்வழியில் காசு சம்பாதிக்கும் கலையில் நம்பிக்கை இல்லை
குறுக்கு வழியில் ,அரசை ஏமாற்றி, மற்றவர்களை ஏமாற்றி குறுகிய காலத்தில் பணக்காரகளாகி சொகுசாக வாழ் வேண்டும் என்று பேராசைதான் காரணம்

இதைபோல்தான் மக்களுடைய சோம்பேறித்தனத்தையும் , அறியாமையும் பயன்படுத்தி வீடு கட்டி தருகிறோம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறோம், அரசு வேலை, வாங்கி  தருகிறோம், கோடிகணக்கில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருகிறோம், பரிகார பூஜை செய்கிறேன் என்று லட்சக்கணக்கில் பணம் கறக்கும் போலி சாமியார்கள், தீர்வே காணாத நோய்களை தீர்த்து விடுகிறேன் என்று தொலைகாட்சியில் தோன்றி பெட்டி அளிக்கும் போலி மருத்துவர்கள், என்று பலவிதமாக ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் தமிழ்நாடு  முழுவதும் தங்கள் கடைகளை விரித்து மக்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன.

மக்களும் ஏமாந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.
யாரும் திருந்துவதாக இல்லை. 
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும்  பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற பழமொழியில் மூன்றாவதான தீர விசாரிப்பதே மெய் என்ற மொழியை மக்கள் சிந்திக்காதாவரை நாட்டு கோழிகளும், ஈமு கோழிகளும் ,போலி சாமியார்களும் அவர்களை ஏமாற்றி கொழுத்து கொண்டு தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டுதான் இருக்கும். 

வியாழன், 6 செப்டம்பர், 2012

தங்கநகை மோகம்

தங்கநகை மோகம் 

இன்று மக்கள் பலவிதமான மோகங்களுக்கு
ஆட்பட்டு சோகங்களை அள்ளி குவிக்கிகிரார்கள் 

பாடுபட்டு சேமித்த காசை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 
ஏமாற்றுபேர்வழிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி 
மொத்தமாக அவர்களிடம் அளித்துவிட்டு மொத்த  காசையும்
இழந்து ஒப்பாரி வைத்துகொண்டு திரிகிறார்கள். 

அதேபோல்தான் வாக்காள பெருமக்களும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு 
ஆப்பசைத்த குரங்குகள்போல் ஒவ்வொரு தேர்தலிலும் ஊழல் பேர்வழிகளுக்கு 
நாட்டை கொள்ளைஅடிக்க அதிகாரம் வழங்கிவிட்டு விலைவாசி உயர்வுகளாலும், அடக்கு முறைகளாலும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் 

தங்கம் அங்கத்திற்கு அழகு சேர்த்தாலும் இன்று அது ஒரு
உயிர் கொல்லி என்பதை மக்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்

பாடுபட்டு சேர்த்த பணத்தை கொண்டு நகைகள் வாங்கினாலும் அதை 
பகிரங்கமாக கழுத்தில் அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக செல்ல இயலவில்லை
எந்த நேரத்தில் எந்த சங்கிலிகருப்பன் கழுத்தில் உள்ள சங்கிலியை அறுத்து செல்வான் என்று யாருக்கும் தெரியாது.

வீட்டில் வயதான் முதியவர்கள் தங்க சங்கிலியை அணிந்து  காட்சி தந்தால் அவர் உயிர் எப்போது யாரால் எந்த ரூபத்தில் வந்து பறிக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. 

தங்கநகை அணித்து குழந்தைகள் பள்ளிக்கோ அல்லது வெளியிலோ சென்றால் அவர்கள் யாரால் கடத்த படுவார்கள் அல்லது  கடத்தி சென்று கொல்லப்படுவார்கள் என்று யாருக்கும் தெரியாது  

நகையை வாங்கி வந்து வீட்டில் லாக்கரில் வைத்தால் அன்றே அது கொள்ளை போவது நிச்சயம். வீடு பூட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் மனிதர்கள் இருக்கும்போதே திருடுவதில் வல்லவர்கள் தமிழ் நாட்டில் உண்டு. எதிர்த்தவர்களை கொலை செய்யவும் தயங்காத அஞ்சா நெஞ்சர்களும் அந்த கூட்டத்தில் உண்டு.

நகை கடை நடத்தும் நிறுவனங்கள் மீண்டும் அந்த நகைகளை கடன் வழங்குகிறோம் என்று நகை வாங்கியவர்களிடம்.மீண்டும் பறித்துகொண்டு வட்டிக்கு  கடன்கொடுத்து கொழுக்கும் அண்டை மாநில நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் பெருகிவிட்டன

இதனால் மக்கள் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதை கொண்டு மகிழ்ச்சியாக வாழாமல் பொருட்களை கடனுக்கு வாங்கியும், நகைகளை,பொருட்களை அடகு வைத்தும்  சாகும்வரை கடனாளியாகவே துன்பப்படுகின்றனர். 

இருப்பதைக்கொண்டு கடன் வாங்காமல் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழும் கலையை மக்கள் அறவே மறந்து விட்டனர். 

புதன், 5 செப்டம்பர், 2012

கண்ணீர் அஞ்சலி


கண்ணீர் அஞ்சலி 
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து 
முப்பது உயிர்கள் தீயில் கருகின 
இன்னும் அணையவில்லை தீ 
இன்னும் மாய்ந்த உயிர்கள் எத்தனையோ?

ஆண்டுதோறும் சிவகாசியில் தீக்கு இரையாகி
பல உயிர்கள் மாய்ந்தாலும் மீண்டும் மீண்டும்  
வெடிகளை தயாரிக்கும் வேட்க்கை குறையாத 
மக்கள் 

பட்டாசுகள் வாழ்வின் அங்கமாகிவிட்டது 
வெற்றி விழாவிலும் வெடிப்பார்கள்
இறுதி யாத்திரைக்கும் வெடித்து தீர்ப்பார்கள் 

மறைந்த உயிர்களின் ஆன்மா சாந்தி பெறட்டும்

இனி வரும்காலத்திலாவது விபத்து நேராது 
தவிர்க்க சம்பந்தப்பட்டவர்கள் 
நடவடிக்கை எடுக்கட்டும் 
 

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இன்று ஆசிரியர் தினம்

இன்று ஆசிரியர் தினம் 

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் 
என்பது முதுமொழி


கற்காதவன் முகத்தில் இருக்கும் இரு கண்கள் 
இரு புண்கள் போன்றது என்பார்  திருவள்ளுவர் 

மாக்களாக இருக்கும் மனித குலத்தை 
மனிதர்களாக்குவது கல்வி  

அதற்க்கு காரணமாக விளங்கிய மற்றும் விளங்கும் 
ஆசிரியர்களை போற்றுவோம் 

தாயும் தந்தையுமே உலகம் என்றிருந்த குழந்தைகளை
பள்ளிக்கு வந்ததும் நீ விஞ்ஞானியாக,மருத்துவராக 
,சிறந்த மனிதனாக விளங்குவாயாக என்று
ஆசிகள் வழங்கும் ஆசிரியர்களை போற்றுவோம் 

ஆன்மீகத்தில் செல்லும் வழி காட்டி ஆண்டவனை உணர,
அடைய வழி காட்டிய குருமார்களை  போற்றுவோம் 

அன்பு,நேர்மை, உண்மை, பரிவு, பாசம்,நேசம்,வீரம்,கடமை என 
பல உயரிய சிந்தனைகளை குழந்தைகளின் மனதில் ஊட்டி 
அவனை மாமனிதனாக சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக 
உயர்த்திய ஆசிரியர்களை போற்றுவோம் 

ஒரு காலத்தில் எழுத்தறிவிக்கும் ஆசிரியர்கள் 
அதை பணியாக செய்தனர் 

இன்றோ அது ஒரு தொழிலாகிவிட்டது.
பள்ளி நடத்துபவருக்கும்,அதில் பணி  புரியும் 
ஆசிரியர்களுக்கும் பணம் கொட்டும் இயந்திரம் 

முற்காலத்தில் கற்பித்தலை தவிர எந்த பணியையும் 
மேற்கொள்ளாத ஆசிரியர்கள் இன்று கற்பித்தலை
பகுதி நேர தொழிலாக கொண்டு மற்ற வேலைகளில்
கவனம் செலுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர். 

தொலைகாட்சிகளிலும்,ஊடகங்களிலும் அவர்களின் நடத்தைகள் 
அலசப்பட்டு ஒரு சிலர் தவறு செய்வதால் இன்று 
அந்த சமூகமே கேலிக்குரிய பொருளாக சித்தரிக்கபடுகிறது.
ஒருகாலத்தில் சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரிய 
மனிதர்களாக வாழ்ந்து வந்த ஆசிரியர்கள் 
இன்று தங்கள் மதிப்பை இழந்துவிட்டனர்.

அரசுகள் கல்விக்காக கோடிகணக்கான ரூபாய்களை செலவழிக்கின்றன. தனியார் நிறுவனங்களும் அதை விட பன்மடங்கு இந்த தொழிலில் முதலீடு செய்கின்றன. கல்வி கற்கும் குழந்தைகள்  ஒரு பக்கம் அதிகரித்தாலும் பள்ளிக்கு செல்லாமல் பாதியிலே பள்ளியை விட்டு விலக நேரிடும் குழந்தைகள் கூட்டமும் பெருகிக்கொண்டே போகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. 

இன்றைய சூழலில் பல ஆசிரியர்கள் குடி போதையில் பள்ளிக்கு வருவது, பள்ளிக்கு வராமல் இருப்பது ,வந்தாலும் பாடங்களை ஒழுங்காக நடத்தாமல் இருப்பது, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருவது, குழந்தைகளை கடுமையாக உடல்,மனம் பாதிக்கும் அளவிற்கு தண்டனை அளிப்பது,மாணவர்களுக்கு அளிக்கும் அரசு உதவிகளை அபகரிப்பது போன்ற குற்ற செயல்களும் அதிகரித்து வருதல்  போன்ற புகார்கள் பரவலாக ஊடகங்களின் தினம் செய்திகளாக   வெளி வருகின்றன. 

மாணவர்களிடம் ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் எதிர்பார்க்கும்,பெற்றோர்களும், ஆசிரியர்களும் தாங்கள் முதலில் அதை கடைப்பிடித்து  மாணவர்களுக்கு எடுத்துகாட்டாக விளங்கவேண்டும் என்ற உண்மையை வசதியாக இன்றுமறந்து விட்டனர்.

இன்றும் ஒழுக்கமான, அன்பான, பண்பான, நேர்மையான, சுயநலமற்ற ஆசிரிய மணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் நல்ல எதிகாலத்தை மாணவர்களுக்கு காட்டி கொடுக்கிறார்கள். அவர்களை மனம் திறந்து பாராட்டுவோம், போற்றுவோம். மற்றவர்களும் அதே போல் நடந்து கொண்டு ஆசிரியர் பணி சிறக்க வேண்டுவோம்.   

சுதந்திரம் யாருக்கு?

சுதந்திரம் யாருக்கு?

வெள்ளையர்கள் என்னும் கொள்ளையர்களிடமிருந்து 
தியாகிகள் தங்கள் உதிரத்தை சிந்தி பெற்ற அரசியல் சுதந்திரம் 
தந்திரமாக அரசியல் கொள்ளையர்கள் கையில் சென்று விட்டது. 

அவர்களே மேல் என்ற நிலைக்கு தள்ளி விட்டது 
நம்மை ஆளுபவர்களின் செயல்பாடுகள் 

இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவரும் சமம் என்று 
எழுத்தில்தான் உள்ளது. 

ஆனால் நடப்பது என்ன?

ஜாதி, மதம் என இரண்டு தொற்றுநோய் கிருமிகள் நம் நாட்டு மக்களை 
தொடர்ந்து தாக்கி அவர்களின் வாழ்வை நாசமாகி கொண்டு வருகின்றன 
பணம் படைத்தவன் கொழுத்து கொண்டே போகிறான்
சாதாரண குடி மகனோ நோயிலும், வறுமையில் புழுங்குகிறான்

அவனுக்கு கடந்தகாலமும் நன்றாக இல்லை .இன்றோ 
அவனுக்கு நிகழ்காலமும் இல்லை,எதிர்காலமும் இல்லை 

கேள்வி -இந்தியா வெள்ளையர்களிடம் சுதந்திரம் அடைந்த பின் என்ன நடந்தது ?
பதில்-  அது கொள்ளையர்களிடம் சிக்கி கொண்டது 

கேள்வி-இந்தியா  சுதந்திரம் அடையு முன் யாரால் ஆளப்பட்டது ?
பதில் - மன்னர்களாலும் ஜமீன்தார்களாலும்  ஆளப்பட்டது 
மன்னாராட்சி மக்களாட்சியாக மாற்றப்பட்டது 

மக்களாட்சி என்றால் என்ன?
மக்கள் தங்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சில பேரை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர வைத்து அவர்கள் கொள்ளையடித்து கொள்ள பல ஆயிரம் கோடி ருபாய் செலவில் தேர்தல் என்னும் திருவிழா நடத்தி  லைசுன்ஸ் வழங்குவது 

ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் கொண்ட அரசுகள் 
கட்டுப்பாடு,உரிமம்,சட்டங்கள் லஞ்சம்,வரிகள்  என பலவகையில் மக்களை கொடுமைபடுத்தி அவர்களை வாழ வழியில்லாமல் ஓட்டாண்டி ஆக்குவது 

ஓட்டாண்டி போல் வேஷம் போட்டுகொண்டு நடிக்கும் போலி சாமியார்களையும்,மத போதகர்களையும் மக்களை ஏமாற்றி கொழுக்க அனுமதிப்பது.
அடிப்படை கல்வி உரிமை என சட்டம் இயற்றிவிட்டு கோடிகணக்கான ரூபாய்களை ஒதுக்கிவிட்டு பள்ளி செல்லும் குழந்தைகளை, பள்ளி சென்று படிக்க பள்ளிகூடங்களை கட்டாமல் ,ஆசிரியர்களை நியமிக்காமல் ,மொழி,ஜாதி, இன அடிப்படையில் பிரித்து மக்களை ஏமாற்றுவது 

இந்தியா சுதந்திரம் அடையுமுன் மக்கள் அடிமைகளாக இருந்தார்கள் 
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கொத்தடிமைகளாக ஆக்கப்படுவிட்டார்கள்

இந்தியா சுதந்திரம் அடையும் முன் ஒரு சில மன்னர்களே இருந்தனர்
இன்றோ எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்

அரசுகள் பெரும்பாலானோரை குடி மன்னர்கள் ஆக்கிவிட்டது 
தமிழ் நாட்டிலோ எக்கச்சக்கமான மோசடி மன்னர்கள் தோன்றிவிட்டார்கள்

(e)எல்லோரையும் (mu)முட்டாளாக்கிய கோழிகள் ஊழல் ,நிதி நிறுவன மோசடிகள், அரசு திட்டங்களில் ஒதுக்கப்படும் நிதி மோசடிகள், பல ஆயிரம் வரி ஏய்ப்பு  மோசடிகள் ,மதத்தின் பெயரால் மோசடிகள் என ஒவ்வொரு நாளும் ஏமாந்து  கோடிகணக்கான ரூபாய்களை இழந்து அழுது புலம்பும் மக்கள் தமிழ் நாட்டில் பெருகி விட்டனர்

அகில இந்திய ரீதியிலோ மத்தியில் ஆளும் அரசுகள் லட்சம் கோடி ரூபாய்களை ஒவ்வொரு துறையிலும் கபளீகரம் செய்துகொண்டு மக்களவையில் குழாயடி சண்டை போட்டுகொண்டு மக்களை ஏமாற்றிகொண்டிருக்கிரார்கள்.
எந்த தீவிரவாதி வேண்டுமானாலும் இந்தியாவிற்குள் வரலாம், குண்டு வைக்கலாம் மக்களை கொள்ளலாம். அவர்களை எந்த அரசும் தண்டிக்காது.மாறாக அவர்களுக்கு ராஜ உபசாரம் கொடுக்கிறது. இறந்துபோன மக்களின் குடும்பத்திற்கு சில லட்சங்களை வீசி விட்டு கடமையை முடித்து கொள்ளுகிறது
ஆனால் தன் வாழ்வாதாரமான விவசாய நிலத்தை அபகரிக்கும் அரசுகளும்,தொழிலதிபர்கள்  மோசடி தரகர்கள்  ஆகியோரை அவர்கள் எதிர்த்து போராடினால் அவர்களுக்கு கிடைப்பது அடிதடியும், சிறைவாசமும், மரணமும்தான்

இன்று இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும் கொள்ளை சம்பவங்கள், கொலை சம்பவங்கள், சுரண்டல், சமூக விரோத கும்பல்களின் அத்துமீறல்கள், ஊழல்கள், லஞ்சம், சட்ட மீறல்கள், சுகாதார  சீர்கேடுகள், சுற்று சூழல் பாதிப்பு, ஏழை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்,உண்ண  உணவு, உறைவிடம் கிடைக்காத நிலை பெண்கள்,குழந்தைகள் மீது கட்டவிழ்த்துவிடப்படும், வன்முறைகள் என இன்று நம் நாட்டு மக்கள் பெரும்துன்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள் 

இந்த நிலைக்கு யார் காரணம்?

நாட்டை ஆளும் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைக்காமல் நயவஞ்சகர்களிடம் ஒப்படைத்ததுதான் 

ஆளுபவர்களிடமும் ஒழுக்கம் இல்லை 
மக்களிடமும் ஒழுங்கும் இல்லை 
இந்நிலை நீடித்தால் விடிவு காலம் பிறப்பது கேள்விக்குறியே 

இந்நிலை என்று  மாறும்?எப்படி மாறும்? யாயறிவார். 

சனி, 1 செப்டம்பர், 2012

குறையுள்ள மனிதர்களும் குறை காணும் மனிதர்களும்

குறையுள்ள மனிதர்களும் 
குறை காணும் மனிதர்களும் 

இதுதான் இன்றைய 
மக்கள் சமூகத்தின் உண்மை நிலை 

மக்களின் குறைகளை தீர்க்கின்றோம் 
அன்று ஆசை வார்த்தைகள் கூறி 
ஆட்சிக்கு வருகிறது ஒரு கூட்டம் 

அதற்க்கு பல்வேறு கொள்கைகளை
உடைய அரசியல் கட்சிகள் 
அமைக்கிறது ஒரு கூட்டணி
பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைத்ததும் 
அதிகாரத்தில் பங்கு கேட்கும் கூட்டணி கட்சிகள்.
தமக்கு ஏதும் கிடைக்கவில்லை 
எனில் கூட்டணியை விட்டு 
விலகி தங்கள் பழைய வழக்கமான
 பல்லவியான குறை கூறும் படலத்தை 
தொடங்கிவிடும். 

அதற்க்கு நம் நாட்டில் தன் குறைகளை மறைத்து 
அல்லது மறந்து குறை கூறும் கூட்டத்தோடு சேர்ந்துகொண்டு 
நாட்டில் குழப்பத்தை விளைவித்துகொண்டிருக்கும். 

ஆளும் கட்சிகளை எந்த நன்மையையும் செய்யவிடாதும்,
அவர்கள் தேர்தல் வியாபாரத்தில் போட்ட முதலை 
எடுக்க விடாமலும் செய்து கொண்டிருக்கும் .
இந்த கூத்தை மக்கள் கூட்டம்  பார்த்து ரசிக்க ஊடகங்களும்
தங்களால் ஆன பணியை செய்வதுடன் தங்களுக்கு 
தேவையான காசையும் சம்பாதித்து கொண்டு கின்றன 

ஆனால் மக்களுக்கு கிடைப்பது ஊழல் நிர்வாகமும்,
விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டமும், 
அதை எதிர்த்து போராடுபவர்களுக்கு அடிதடியும், 
சிறை வாசமும்தான் மிச்சம்.

எந்த அரசுகளும் மக்களை  நிம்மதியாக வாழ விடுவதில்லை, 
தொழில் செய்து பிழைக்க விடுவதில்லை. 
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் 
வரிகளை விதித்து, உரிமம் என பல கட்டுபாடுகளை விதித்து
மக்களை கொடுமைப்படுத்தி கொண்டிருக்கின்றன.

எதிர்கட்சிகள் தினந்தோறும், மறியல், போராட்டம், 
கடையடைப்பு என மக்களை துன்பபடுத்திகொண்டு மகிழ்ந்து வருகின்றன. 

எந்த அரசுகளும் மக்களை நேரடியாக பாதிக்கும் 
எந்த பிரச்சினையையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பது கிடையாது. 
எதிக்கட்சிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். சில நேரங்களில் 
மக்களே தீர்விற்கு இணங்காமல் பிரச்சினைகளை சிக்கலாக்கிவிடுகின்றனர்.
ஊடகங்கள் மக்களை உண்மை நிலை அறிய விடாமல் குழப்புகின்றன.

மக்களின் வாழ்வு மேம்பாடு அடைய அரசுகள்  போடும் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் அரசு கருவூலத்திலிருந்து மக்களுக்கு போய் சேருவதற்குள் அமைச்சர்கள், அதிகாரிகள், ஒப்பந்தகாரகள், போலி நிறுவனகள், சமூக விரோதிகள் மற்றும் பலர் என அனேக சுயநலவாதிகளின் பையை நிரப்பிவிட்டு செல்லும்போது மக்களின் வயிற்று  பை நிரம்புவதற்கு  போதுமானதாக இருப்பதில்லை. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதை தடுக்கும் உறுதி எந்த மட்டத்திலும் இல்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே போகிறது. 

ஊழல் பெருச்சாளிகள் அனைத்து சட்டங்களையும் மீறி அதன் இடுக்குகளில் நுழைந்து வெற்றிகரமாக  மழை துளிகளிடையே லாவகமாக பறந்து சென்று ரத்தத்தை குடிக்கும் கொசுக்கள்போல் திறமையாக மக்களை ஏமாற்றி கொழுக்கின்றனர் 
  
எல்லா நிலையில் முறைகேடுகளும் சீர்கேடுகளும் 
நிலவுவதற்கு மக்களே முழு காரணமாக இருந்து கொண்டு,.
அவர்களில் ஒரு பகுதியினரான அரசியல் கட்சி தலைவர்களையும் 
நிர்வாகத்தினரையும் மட்டும் குற்றம் சாட்டுவதிலேயே ஒவ்வொரு நாளும் கழிகின்றது
மக்கள் மனம் திருந்தவேண்டும்,.
மனதில் ,செயலில் நேர்மை வரவேண்டும்.
நல்லவை செய்பவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

குறையுள்ளவன்தான்  மனிதன். 
இருந்தாலும் பிறர் மீது மட்டும் குறை காண்பதை விடுத்து
மக்கள் தங்களிடம் உள்ள குறைகளை ஆராய்ந்து 
அதை நீக்க முயல வேண்டும்.

இல்லாவிடில் மக்களின் தங்களின் 
வறுமை நீங்கும் கனவு என்றும் 
வெறுமையாகத்தான் இருக்கும்
இந்த அவல  நிலைமை 
எத்தனை ஆண்டுகளானாலும்  மாறாது. 
அப்படியேதான் இருக்கும்.