ஞாயிறு, 19 ஜூலை, 2015

தெய்வங்கள் வாழும் இல்லம்


தெய்வங்கள் வாழும் இல்லம் 


கள்ளமில்லா உள்ளம்
தெய்வங்கள் வாழும் இல்லம்

மழலைகள் மனித குலத்திற்கு
இறைவன் தந்த  செல்வம்

அதை அடையாதோர்
அடைவார்  அளவற்ற துன்பம்

ஆனால் அடைந்தவரோ அதன்
மாண்பை உணராது மட்டிபோல்
மதம் பிடித்து அலைகின்றார்.

அடித்து துன்புறுத்துகின்றார்
தகாத வார்த்தைகள் கூறி
அவர்களின் மனதில் ஆறாத
வடுவை உண்டாக்குகின்றார்.


சிலர் பெற்ற குழந்தையை
குப்பை தொட்டியில் இரக்கமின்றி
வீசுகின்றார் பிறர் தம்மை
ஏசுவாறேன்று .எண்ணி
என்னே மடமை !

இன்னும் சிலரோ மாதவம் செய்தால்  கூட
கிடைக்காத பெண் சிசுவை தாய்ப்பால்
ஊட்ட மறுத்து கள்ளிப்பால் ஊட்டி
கொல்லுகின்றார்

என்று  திருந்துமோ இந்த மூடர் கூட்டம் 
தன்  அடாத செயலுக்கு என்று வருந்துமோ 
நான் அறியேன்?



Pattabiraman Tr's photo.

2 கருத்துகள்: