சனி, 25 அக்டோபர், 2014

நன்றி கெட்ட மானிடனே !

நன்றி கெட்ட  மானிடனே !

மானிடனே நன்றி மறந்து வாழ்வதுதான் உன்
பிறவிக் குணமோ?


ஒரு நாய்க்கு இருக்கும் நன்றி கூட உனக்கு
அணுவளவும் கிடையாது என்பதை
அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்.
உன் அன்றாட செயல்கள் மூலம்.



உன் சுயனலதிர்க்காக நீ எதை வேண்டுமானாலும்
செய்வாய் என்பது அனைவருக்கும் தெரியும்.

என் பல உயிர்களையே ஈவிரக்கமின்றி கொல்வாய்
கொன்றதை தின்னவும் செய்வாய்.

நீ என் காலில் இட்ட கழிவு நீரை சுவையான
சுத்தமான, சுகாதாரமான தாகம் தீர்க்கும்
இளநீராக மாற்றிக் கொடுத்தேன் அதை
குடித்தும், காய்களை  விற்றுக் காசாக்கியும்
பல ஆண்டுகள் நான் வழங்கிய சுகங்களை
அனுபவித்தாய்.





ஆனால் இன்று அடுக்கு மாடி கட்டவேண்டும் அதற்கு நான்
இடையூறாய் இருக்கிறேன் என்று என் தலையை
மொட்டை அடித்தாய். அடுத்த நாளே என் கதையையே
முடித்து விட்டாய்.

உன் தலையை மொட்டை அடித்தால், மீண்டும் முடி வளரும்
ஆனால் என் தலையை மொட்டை அடித்தால். என்ன ஆகும்
என்று உனக்கு தெரியும்.

மாறும் மனம் கொண்ட  குணம் கொண்ட உனக்கு நன்றி மறத்தல்
இயல்பாக இருக்கலாம். ஆனால் நான் மீண்டும் வேறொரு
இடத்தில் முளைப்பேன்  தழைப்பேன். என்னிடம் உள்ள
அனைத்தையும் அனைவருக்கும் வழங்குவேன்.




அதுதான் எனக்கு இறைவன் இட்ட   கட்டளை.

4 கருத்துகள்: