வெள்ளி, 12 அக்டோபர், 2012

சிந்திக்க சில வரிகள்









சிந்திக்க சில வரிகள் 







யாகாவாராயினும் நா காக்க 
என்றான் வள்ளுவன் 

தன்னை தான் காக்க சினம் காக்க 
என்றான் அதே வள்ளுவன்
பிறிதோரிடத்தில் 

அவன் கூறியதை கருத்தில் 
கொள்ளாது கடவுளை நோக்கி 
அனுதினமும் 
காக்க காக்க என்று 
கரடியாக கத்தினால் மட்டும்
காப்பாற்ற வருவானோ 
அந்த இறைவன்.?  

அன்பே சிவம் என்றார் திருமூலர் 
அவன் படைப்புகளிடம் 
அன்பாய் வாழ்வதை விடுத்து 
இவர்கள் படைத்த சிலைகளிடம்
மட்டும் அன்பு செலுத்தி யாது பயன்?

பசித்தோர்க்கு உணவிடாமல்
உண்ட உணவு செரிக்காது 
எந்நேரமும் மாத்திரைகளை
உணவாக கொள்ளும் 
மாந்தர்களுக்கு விருந்து
படைத்து என்ன பயன்? 

நம் உள்ளத்தில் அழுக்காறு 
ஒடுவதனால்தான் என்னவோ
வெளியுலகில் பாலாறு 
போன்ற ஆறுகள் 
வற்றிவிட்டனவோ?

பிறரை நிந்திப்பதை விடுவோம்
சிந்திப்பதை செயல்படுத்தி
வாழ்வில் வெற்றி காண்போம் 

2 கருத்துகள்:

  1. சிந்திக்க... செயல்படுத்த... அருமையான வரிகள்...

    பதிலளிநீக்கு
  2. முதலில் நாம் இருவரும்
    அவ்வாறு நடக்க
    தொடங்குவோம்

    சிறிது காலத்திற்கு
    பிறகு நம்பிக்கையோடு
    திரும்பி பார்த்தால்
    நம்மை பார்த்து பல பேர்கள்
    நம்மை தொடர்ந்து
    வந்துகொண்டிருப்பார்கள்.

    நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டும்
    செக்கு மாடு போல்
    இருந்த இடத்திலேயே
    ஆயுள் முழுவதும்
    சுற்றி சுற்றியே
    சுருண்டு படுத்துவிடுவார்கள்

    பதிலளிநீக்கு