சனி, 29 செப்டம்பர், 2012

மழை நீர் சேகரிப்பு திட்டம்- அரசுக்கு சில யோசனைகள்

மழை நீர் சேகரிப்பு திட்டம்-
அரசுக்கு சில யோசனைகள்
தமிழ் நாட்டின் முதல்வர் அறிமுகப்படுத்திய
மழை நீர் சேகரிப்பு திட்டம் முன்னோடியான நல்ல திட்டம்.

ஆனால் அது செயல்படுத்தப்பட்ட வேகம் 
வழக்கம்போல் அரசுத்துறைகள்
இலக்கு நிர்ணயித்து பணிகளை 
குறிப்பிட்ட காலத்திற்கும் முடிக்க வேண்டும்
என்று திணிக்கப்பட்டதால் உரிய பலனை தரவில்லை. 

அடுத்து வந்த அரசு அந்த நல்ல திட்டத்திற்கு 
ஊக்கமும் ஆக்கமும் அளிக்காமையால்
இன்று கட்டிடம் கட்ட அனுமதி பெறுவதற்கு மட்டும் 
தொடர்ந்து செயல்படாத ஒரு மழைநீர் அமைப்பை நிறுவி 
மக்கள் அனுமதி பெற்றுக்கொள்கின்றனர். 

இன்னும் மக்கள்  அதன் நன்மையை 
உணராததுதான் இதற்க்கு காரணம் 
இன்று ஆழ் துளை கிணறுமூலம்தாம்
 மக்கள் தண்ணீர் பெறுகின்றனர். 
பெரும்பாலான இடங்களில் தண்ணீர் 
சுவையில்லாமல் பலவிதமான உப்புகள்,
சுண்ணாம்பு போன்ற படிமங்கள் கலந்து உள்ளது 
மழை நீரை உரிய முறையில் வடிகட்டி அதை
கிணற்றுக்குள் செலுத்தினால் நீர் மட்டம் உயரும் .
தண்ணீரும் சுவையாக் மாறிவிடும். .

இந்த திட்டம்  மக்கள் திட்டமாக மாற வேண்டும் 

முக்கியமாக எங்கெல்லாம் தண்ணீர்  பஞ்சம் நிலவுகிறதோ,
எங்கெல்லாம் குடிநீர் வெகு ஆழத்திற்கு சென்று விட்டதுவோ,
எங்கெல்லாம் உப்பு தண்ணீராக ,மாறிவிட்டதுவோ 
அந்த பகுதிகளை அரசு ஏற்கெனவே  கண்டறிந்து வைத்துள்ளது.

இந்த மழைக்காலம் தொடங்கும் 
முன் அந்த பகுதிகளில் மட்டும் உடனடியாக 
ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் 
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மக்களே 
மனமுவந்து ஏற்ப்படுத்தி கொள்ளும்வகையில் 
அரசு முனைப்பாக செயல்படவேண்டும்.
அவ்வாறு செயல்பட்டால் நல்ல  பயன் கிடைக்கும்.
 மக்கள் குடிநீருக்காக செலவிடும் 
கணிசமாக குறைந்துவிடும்.

 மக்கள் தொகை அதிமாகவும், நெருக்கி கட்டப்பட்ட வீடுகளை 
 கொண்ட இடங்களில் மழை நீர் அமைப்புகள் அமைப்பது வீணே.
 ஏனென்றால் ஒவ்வொரு வீட்டின் கழிவுநீரும் 
கழிப்பிடங்களின் கழிவு நீரும், குடிநீரும். 
தேங்கி ஒன்றாக கலந்து இருப்பதால்
மழை நீர் சேகரிப்பு திட்டம்  அமைக்க இடமே 
இல்லாத பகுதிகளில் இத்திட்டத்தை 
செயல்படுத்துவதால் பயன் ஏதும் இல்லை. 

ஆனால் அடுக்கு மாடி கட்டிடங்களில் 
மழை நீர் அதிக அளவில் வீணடிக்கப்படுவதால் 
அங்கு கண்டிப்பாக இந்த அமைப்பை  அமைத்து
 பராமரிக்கும்படி அரசு ஆணையிட்டால்
 பயனுள்ளதாக இருக்கும். 

அதே நேரத்தில் அங்கிருந்து  வெளியேறும் கழிவு நீரை
 சுத்திகரித்து அவர்களே அங்கு பலவிதங்களில்
 பயன்படுத்தும் தொழில்கருவிகளை நிறுவுவது
 கட்டாயமாக்கப்படவேண்டும். 

அதை தவிர அனைத்து குளங்களையும் ஏரிகளையும்.
 இயந்திரங்களை கொண்டு உடன் ஆழப்படுத்தி கரைகளை
 பலப்படுத்தியும் வைத்தால் நிலத்தடி நீர் நிச்சயம் உயறும்.
 தண்ணீர் பஞ்சமும் தீரும் 
  

1 கருத்து: